மேலும் அறிய

சிந்து நதி நீரில் கட்டுமானம் கட்டினால்...அதை...2வது முறை மிரட்டல் விடுத்த பாகிஸ்தான அமைச்சர்

Pakistan-India: சிந்து நதி நீரில் ஏதேனும் கட்டுமானத்தை கட்டினால் , அதை தகர்ப்போம் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவிற்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சிந்து நதியில் இந்தியா ஏதேனும் கட்டமைப்பைக் கட்டி, சிந்து நீர் ஒப்பந்தத்தை மீறினால், பாகிஸ்தான் அதை தகர்க்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகளாக இருந்தனர். இதையடுத்து, பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அரசு உதவி செய்து வருவதாக கூறி, இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடியின் ஒரு பகுதியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்ததாவது, சிந்து நதியில் எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, ஆக்கிரமிப்பாகத்தான் பார்க்கப்படும் என்று கவாஜா ஆசிப் கூறினார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா ஏதேனும் ஒரு கட்டமைப்பை உருவாக்க முயன்றால், நாங்கள் அதைத் தகர்ப்போம். ஆக்கிரமிப்பு என்பது பீரங்கிகளையோ அல்லது தோட்டாக்களையோ வைத்து மட்டும் சுடுவது மட்டுமல்ல. அதற்கு பல முகங்கள் உள்ளன. அந்த முகங்களில் ஒன்று தண்ணீரைத் தடுப்பது அல்லது திசை திருப்புவது. இதனால் பசி மற்றும் தாகத்தால் மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று ஆசிப் மீண்டும் வலியுறுத்தினார்.

சிந்து நதியில் அணை உள்ளிட்ட ஏதேனும் கட்டுமானத்தை இந்தியா கட்டும் முயற்சியை மேற்கொண்டால், பாகிஸ்தான் அந்த கட்டமைப்பை அழித்துவிடும். 
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவது இந்தியாவுக்கு எளிதானது அல்ல, இதுதொடர்பாக பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை அணுகும். 

அரசியல் ஆதாயங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கவாஜா ஆசிப் இந்தியாவை அச்சுறுத்த முயற்சிப்பது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த வாரம் தெரிவித்ததாவது, எங்களிடம் ஏவுகணைகள் இருப்பது காட்சிக்காக இல்லை, இந்தியா நோக்கி இருக்கின்றன என்றும் மிரட்டும் தொணியில் பேசினார். இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் "எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக உள்ளது, இந்தியாவால் தொடங்கப்படும் எதற்கும் எங்கள் பதிலடியை கொடுப்போம் என மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget