மேலும் அறிய

Nepal Earthquake | நேபாள் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் அச்சம்; பாதிப்பு விபரங்கள் வெளியீடு

நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் வீடுகள் பல இடிந்து சேதமாகியுள்ளது.

நேபாளத்தில் லாம்ஜங் மாவட்ட மார்சியங்டி கிராமப்புற நகராட்சியின் பூல்பூலேவின் மையப்பகுதியில் இன்று அதிகாலை 5:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாலை நேரம் என்பதால் வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அனைவராலும் வெளியே வரமுடியவில்லை. பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்கள் மீட்டு அருகிலுள்ள லாம்ஜங் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.


Nepal Earthquake | நேபாள் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் அச்சம்; பாதிப்பு விபரங்கள் வெளியீடு

 

மேலும் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி, 4.0 மற்றும் 5.3 ஆகிய இரண்டு நிலநடுக்கங்களும் மாவட்டத்தில் காலை 8:16 மற்றும் காலை 8:26 மணிக்கு பதிவாகியுள்ளன. மேலும் லாம்ஜங்கில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து காலை 10 மணிவரை சுமார் 20 சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் வீட்டின் தூங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் சிக்கி பாதி புதைந்த நிலையில் இருந்ததாகவும் அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சுமார் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் அதிகாரி ஜகதீஷ் ரெக்மி  தெரிவித்துள்ளார். மேலும் சேதமடைந்த வீடுகளில் பெரும்பாலும் மண்ணினால் கட்டப்பட்ட வீடுகள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதோடு லாம்ஜங்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்று மனாங், காஸ்கி மற்றும் கோர்காவிலும் நில அதிர்வு இன்று உணரப்பட்டது.


Nepal Earthquake | நேபாள் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் அச்சம்; பாதிப்பு விபரங்கள் வெளியீடு

இதோடு நேபாளத்தின் வனப்பகுதியில்  பூமிக்கு அடியில் வெறும் 1.3 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.9 பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நேபாளின் காப்தாட் தேசிய பூங்காவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7.8 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம் நேபாளத்தையே உலுக்கியது. இதனால் கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேர் உயிரிழந்ததோடு, கிட்டத்தட்ட 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதோடு மட்டுமின்றி காட்மண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 லட்சத்திற்கு அதிகமான வீடுகள் மற்றும் பள்ளிகள் சேதமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Embed widget