மேலும் அறிய

Nepal Earthquake | நேபாள் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் அச்சம்; பாதிப்பு விபரங்கள் வெளியீடு

நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் வீடுகள் பல இடிந்து சேதமாகியுள்ளது.

நேபாளத்தில் லாம்ஜங் மாவட்ட மார்சியங்டி கிராமப்புற நகராட்சியின் பூல்பூலேவின் மையப்பகுதியில் இன்று அதிகாலை 5:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாலை நேரம் என்பதால் வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அனைவராலும் வெளியே வரமுடியவில்லை. பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்கள் மீட்டு அருகிலுள்ள லாம்ஜங் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.


Nepal Earthquake | நேபாள் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் அச்சம்; பாதிப்பு விபரங்கள் வெளியீடு

 

மேலும் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி, 4.0 மற்றும் 5.3 ஆகிய இரண்டு நிலநடுக்கங்களும் மாவட்டத்தில் காலை 8:16 மற்றும் காலை 8:26 மணிக்கு பதிவாகியுள்ளன. மேலும் லாம்ஜங்கில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து காலை 10 மணிவரை சுமார் 20 சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் வீட்டின் தூங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் சிக்கி பாதி புதைந்த நிலையில் இருந்ததாகவும் அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சுமார் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் அதிகாரி ஜகதீஷ் ரெக்மி  தெரிவித்துள்ளார். மேலும் சேதமடைந்த வீடுகளில் பெரும்பாலும் மண்ணினால் கட்டப்பட்ட வீடுகள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதோடு லாம்ஜங்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்று மனாங், காஸ்கி மற்றும் கோர்காவிலும் நில அதிர்வு இன்று உணரப்பட்டது.


Nepal Earthquake | நேபாள் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் அச்சம்; பாதிப்பு விபரங்கள் வெளியீடு

இதோடு நேபாளத்தின் வனப்பகுதியில்  பூமிக்கு அடியில் வெறும் 1.3 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.9 பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நேபாளின் காப்தாட் தேசிய பூங்காவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7.8 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம் நேபாளத்தையே உலுக்கியது. இதனால் கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேர் உயிரிழந்ததோடு, கிட்டத்தட்ட 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதோடு மட்டுமின்றி காட்மண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 லட்சத்திற்கு அதிகமான வீடுகள் மற்றும் பள்ளிகள் சேதமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
சேலம் மின் தடை: முக்கிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சேலம் மின் தடை: முக்கிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Kilambakkam Spl Buses: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா! அப்போ கவலை வேண்டாம்.. சிறப்பு பேருந்துகள் ரெடி
Kilambakkam Spl Buses: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா! அப்போ கவலை வேண்டாம்.. சிறப்பு பேருந்துகள் ரெடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
IND vs ENG 3rd Test: கிரிக்கெட்டின் மெக்கா என்று லார்ட்ஸ் மைதானத்தை அழைப்பது ஏன்? இத்தனை சிறப்புகளா!
சேலம் மின் தடை: முக்கிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
சேலம் மின் தடை: முக்கிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
Kilambakkam Spl Buses: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா! அப்போ கவலை வேண்டாம்.. சிறப்பு பேருந்துகள் ரெடி
Kilambakkam Spl Buses: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா! அப்போ கவலை வேண்டாம்.. சிறப்பு பேருந்துகள் ரெடி
Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
Embed widget