Safest Country: 3ம் உலகப் போர் வெடித்தால்..! எந்த நாடுகள் பாதுகாப்பானவை? ஏன் இங்கு பாதிப்பு வராது தெரியுமா?
3rd World War Safest Country: ஈரான் - இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் மூன்றாவது உலகப் போர் வெடித்தால், எந்த நாடுகளில் பாதுகாப்பாக தஞ்சமடைய முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

3rd World War Safest Country: மூன்றாவது உலகப் போர் வெடித்தாலும், பாதுகாப்பாக இருக்கக் கூடிய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
3வது உலகப் போர் சூழல்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான மோதல் மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் காஸாவும் போரை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலில், அமெரிக்கா தலையிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எங்கு மூன்றாவது உலகப் போர் வெடிக்குமோ? என்ற அச்சமும் அதிகளவில் பரவத் தொடங்கியது. சர்வதேச அளவில் நிலையற்றதன்மை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஈரான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது ஓரளவிற்கு நிம்மதியை கொடுத்தாலும், சர்வதேச உறவுகளில் அதிகரித்து வரும் உலகளாவிய மோதல் அமைதியற்ற நிலையையே காட்டுகிறது.
எங்கு பாதுகாப்பு கிடைக்கும்?
மோதல் உலகளாவிய போராக வளர்ந்தால், ஒவ்வொரு தரப்பினருக்குமான உலகளாவிய நட்பு நாடுகளும் போரில் குதிக்கும். இருப்பினும், இந்த மோதலால் சில பகுதிகள் குறைவாகவே பாதிக்கப்படலாம். புவிசார் அரசியல் நிலைப்பாடு, ராணுவ நடுநிலைமை மற்றும் புவியியல் நிலை காரணமாக பாதுகாப்பான புகலிடங்களாகச் செயல்படக்கூடிய நாடுகளை இங்கிலாந்தைச் சேர்ந்த நாளேடு ஒன்று அடையாளம் கண்டுள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கு மக்கள் பாதுகாப்பாக தஞ்சமும் பெறலாம்.
பாதுகாப்பான நாடுகள்:
1. அண்டார்டிகா
தென் துருவத்தின் எல்லையில் இருப்பதால் அண்டார்டிகா மிகவும் பாதுகாப்பான பகுதியாக திகழ்கிறது. அணு ஆயுத போரே வெடித்தாலும் அதன் புவிசார் அமைவிடம் காரணமாக மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. பரந்து விரிந்த 14 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு, தஞ்சமடைய விரும்புவோருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும், அங்கு நிலவும் கடும் பனி சூழல் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளுக்கு சவால் விடுக்கிறது.
2. ஐஸ்லாந்து
மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஒன்றாக ஐஸ்லாந்து தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த நாடு ஒருபோதும் முழு நேர போரில் ஈடுபட்டதில்லை. தொலைதூர புவியியல் இருப்பிடத்தால் போரால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளை குறைக்கிறது. இருப்பினும் அணுசக்தி தாக்குதல் சிறிய அளவில் அங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
3. நியூசிலாந்து
நடுநிலையான நிலைப்பாடு மற்றும் சர்வதேச அளவில் அமைதிக்கான குறியீட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, அதன் மலை முகடுகளை பாதுகாப்பு அரணாக கொண்டுள்ளது. உக்ரைனுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்திருந்தாலும், ரஷ்யாவுடனான மேற்கத்திய மோதலில் நியூசிலாந்து குறிவைக்கப்பட வாய்ப்பில்லை.
4. சுவிட்சர்லாந்து
இரண்டாம் உலகப்போரின்போது அதன் நடுநிலைத்தன்மையால் அறியப்பட்ட சுவிட்சர்லாந்து, தனது மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அணுசக்தி முகாம்களால் பாதுகாக்கப்படுகிறது. அதன் அரசியல் நடுநிலைமை சுவிட்சர்லாந்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கிறது. மேலும் அது உக்ரைனின் ராணுவ முயற்சிகளுக்கு பங்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5. கிரீன்லாந்து:
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் அமைவிடம் மற்றும் அரசியல் நடுநிலைத்தன்மை காரணமாக, போரில் இந்த நாடு குறிவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகும். அதன் வெறும் 56 ஆயிரம் என்ற மக்கள் தொகை எண்ணிக்கை, சர்வதேச மோதல் விவகாரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் எந்த எதிரிகளாலும் குறிவைக்கப்படமாட்டாது.
6. இந்தோனேஷியா
உலக அமைதிக்கு முக்கியத்துவம் அளித்து, இந்தோனேஷியா அரசியல் நடுநிலைத்தன்மையை பின்பற்றுகிறது. சுதந்திரமான செயல்பாடு மற்றும் புவிசார் அரசியல், உலகளாவிய மோதல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
7. துவாலு:
வெறும் 11 ஆயிரம் பேரை மட்டுமே கொண்ட ஒரு சிறிய தீவு நாடான துவாலுவின் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் அதை இலக்காக மாற்றுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியா இடையே அமைந்துள்ள அதன் இருப்பிடம் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தலை வழங்குகிறது.
8. அர்ஜென்டினா
கோதுமை போன்ற பயிர்கள் நிறைந்த அர்ஜென்டினா, உலகளாவிய பஞ்சம் ஏற்பட்டாலும் கூட உணவுப் பொருட்களுடன் அணுகுண்டு போரின் தாக்கத்தையும் தாங்கும். இந்நாட்டிற்கு மோதல் வரலாறு இருந்தபோதிலும், அதன் விவசாய வளங்கள் காரணமாக இது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான புகலிடமாகவே உள்ளது.
9. பூட்டான்
1971 ஆம் ஆண்டு நடுநிலைமையை அறிவித்ததிலிருந்து, பூட்டான் அதன் மலைப்பாங்கான புவியியல் அமைப்பால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் மூலோபாய நிலை வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதை எளிதாக்குகிறது.
10. சிலி
சிலியின் 4,000 மைல்கள் பரந்து விரிந்திருக்கும் பரந்த கடற்கரையும், அதன் ஏராளமான இயற்கை வளங்களும் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் வழங்குகின்றன. அதன் மேம்பட்ட உள்கட்டமைப்பு அதை தென் அமெரிக்காவின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது.
11. பிஜி
ஆஸ்திரேலியாவிலிருந்து 2,700 மைல் தொலைவில் அமைந்துள்ள பிஜியின் தொலைதூர இருப்பிடம், ராணுவ கவனம் இல்லாதது மற்றும் அடர்ந்த காடுகள் அதை அமைதியான வசிப்பிடமாக மாற்றுகின்றன. அதன் குறைந்தபட்ச ராணுவமும், உலகளாவிய அமைதி குறியீட்டில் உயர்ந்த இடத்தில் இருப்பது அதன் பாதுகாப்பை அதிகரிக்கின்றன.
12. தென்னாப்பிரிக்கா
ஏராளமான வளமான நிலம், நன்னீர் மற்றும் நவீன உள்கட்டமைப்புடன், தென்னாப்பிரிக்கா உயிர்வாழ்வதற்கான நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது. அதன் பன்முகத்தன்மை கொண்ட வளங்களும் விவசாய ஆற்றலும் நெருக்கடிகளின் போது நாடு அதன் மக்கள்தொகையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கிறது.





















