மேலும் அறிய

Arrested Journalists : நசுக்கப்படும் கருத்து சுதந்திரம்...உச்சம் தொட்ட பத்திரிகையாளர்களின் கைது எண்ணிக்கை...!

2022ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை, உலகம் முழுவதும் 363 செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக பத்தியாளர்களை பாதுகாக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுவது ஊடகம். மக்கள் குரலாக இருந்து அவர்களின் பிரச்னையை பிரதிபலிப்பதே ஊடகத்தின் தலையாய கடமையாகும்.

அப்படி, மக்களின் குரலாக இருந்து பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவது சமீப காலமாகவே அதிகரித்து வந்துள்ளது. இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் இதுபோன்ற போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்படுவது உச்சத்தை தொட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை, 363 செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக பத்தியாளர்களை பாதுகாக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்பான பத்தியாளர்களை பாதுகாக்கும் கமிட்டி வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான சிறை கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட 20 சதவகிதம் அதிகமான பத்திரிகையாளர்கள் இந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சீரழிந்து வரும் ஊடக நிலப்பரப்பில் மற்றொரு மோசமான மைல்கல் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், சீனா, மியான்மர், துருக்கி, பெலாரஸ் ஆகிய நாடுகளில்தான் அதிக அளவில் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

"கொராோனா மற்றும் உக்ரைன் மீதான ரஷிய போரின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் சீர்குலைந்த உலகில் உள்ள அதிருப்தியை மூடிமறைக்கும் நோக்கத்துடனே ஊடகத்தை ஒடுக்க சர்வாதிகார அரசுகள் அதிகளவில் முயற்சிகளை எடுக்க காரணம்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்படுவது குறித்து பேசியுள்ள கமிட்டி, "இந்தியாவில் ஏழு பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, ஊடகத்தை நடத்தும் விதம் ஆகியவை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 

குறிப்பாக, தனி வழக்குகளில் பிணை வழங்கப்பட்ட பிறகும், ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம், தடுப்பு காவல் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி காஷ்மீர் பத்திரிக்கையாளர்களான ஆசிப் சுல்தான், ஃபஹத் ஷா மற்றும் சஜாத் குல் ஆகியோரை சிறையில் அடைத்தது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

 

இந்த ஏழு பத்திரிகையாளர்களில் ஆறு பேர் பயங்கரவாதம் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் அல்லது குற்றம் சாட்டப்பட்டனர்" என குறிப்பிட்டுள்ளது.

ஆட்சியாளர்கள் ஊடக சுதந்திரத்தை நசுக்க மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்களில் ஒன்றே பத்திரிகையாளர்களை கைது செய்வது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், போலி செய்தி சட்டங்கள், தெளிவற்ற சட்டங்கள் போன்ற தந்திரங்களை பயன்படுத்தி பத்திரிகை தொழிலை குற்றமாக்கி வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget