மேலும் அறிய

ட்ரம்ப் மீது விசாரணை நடத்தாவிட்டால் சுலைமானி கொலைக்கு பழிதீர்ப்போம்: ஈரான் உறுதி

ட்ரம்ப் மீது விசாரணை நடத்தாவிட்டால் சுலைமானி கொலைக்கு பழிதீர்ப்போம் என ஈரான் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் மீது விசாரணை நடத்தாவிட்டால் சுலைமானி கொலைக்கு பழிதீர்ப்போம் என ஈரான் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ரஹிம் ரைஸி, அந்நாட்டின் ராணுவத் தளபதியான ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாவது நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது இதனைத் தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். 

ஈரான் நாட்டின் அதிபருக்கு அடுத்த நிலையில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஈரான் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. இரானின் சக்தி வாய்ந்த தலைவர் காசிம் கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாவது நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிபர் இப்ரஹிம் ரைஸி, ”ட்ரம்பும், முன்னாள் வெளியுறவுச் செயலர் பாம்பியோவும் இதுதொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஜெனரல் சுலைமானி கொலைக்கு நாங்கள் வஞ்சம் தீர்ப்போம். ட்ரம்ப்தான் சுலைமானி படுகொலையில் முக்கியக் குற்றவாளி. அவர் தான் ரத்தக் கைகள் கொண்ட கொலையாளி. அவர்தான் அடக்குமுறைவாதி. அவரை இஸ்லாமிய சட்டப்படி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவரின் மீது இறைவனின் நீதிப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார்.


இந்தப் பேச்சு மேற்கத்திய நாடுகளில் அச்சத்துடன் பார்க்கப்படுகிறது. ட்ரம்புக்கான கொலை மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் அப்போதைய பேச்சு:

முன்னதாக கடந்த 2020ல் சுலைமானி கொல்லப்பட்டபோது அப்போது அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் பேசியதும் கவனிக்கத்தக்கது.

அவர் பேசும்போது,  "சமீபகாலமாக இராக்கில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் வீரர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் சுலைமானியின் வழிகாட்டுதலின்படியே நடந்துள்ளன. அப்பாவி மக்களின் மரணத்தையே தன் ஆர்வமாகவும் விருப்பமாகவும் கொண்டிருந்தார் சுலைமானி. அவர் டெல்லி முதல் லண்டன் வரை நடக்கும் பயங்கரவாத சதிகளுக்குப் பங்காற்றியுள்ளார்.

சுலைமானியின் பல அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களை நாம் இன்றும் நினைவில் வைத்து மதிக்கிறோம். தற்போது அவரின் பயங்கரவாத ஆட்சி முடிந்துவிட்டது என்பதில் ஆறுதல் கொள்வோம். அமெரிக்கா நேற்று செய்ததை நீண்ட காலத்துக்கு முன்னரே செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.  ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவரவே  நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.  போரை உருவாக்க அல்ல" என்று பேசியிருந்தார்.

ட்ரம்ப் பார்வையில் போர், ஈரான் பார்வையில் படுகொலை. இதற்கு முடிவு தான் என்ன?!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget