சின்னாபின்னமாக போகும் பாகிஸ்தான்... இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய மத்திய அரசு..
அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளாத மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பேர் நிறுத்தம் அறிவித்த நிலையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளாத வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் போர்
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான், இந்தியா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தது.
போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்
இந்த சூழலில், இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதனை அடுத்து, பாகிஸ்தானுடனான போர் இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், போர் நிறுத்தத்தை மீறி தற்போது இந்தியா மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் தற்சமயம் டிரோன், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
உமர் அப்துல்லா அதிர்ச்சி பதிவு
போர் நிறுத்தம் அமலாகவில்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போர் நிறுத்தம் அமலாகவில்லை. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது' என பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு விளக்கம்
சண்டை நிறுத்தம் உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் செயல்பட்டது உண்மை தான், கடந்த சில மணி நேரங்களாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்திமீறி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய படைகள் முறியடித்து வருகின்றன, பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துமீகலை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். நிலைமையை புரிந்து கொண்டு பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.






















