![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mexico Gun Shoot: மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 9 பேர் கொள்ளப்பட்ட சம்பவம்..
மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்.
![Mexico Gun Shoot: மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 9 பேர் கொள்ளப்பட்ட சம்பவம்.. gun shoot leaves 9 dead 2 wonded at central mexican bar lounge Mexico Gun Shoot: மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 9 பேர் கொள்ளப்பட்ட சம்பவம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/11/cf97c09fc0e5600f3169439517f371ce1668145839971589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவை அடுத்து அதன் அண்டை நாடான மெக்சிகோவிலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. கடந்த மாதம் மெக்ஸிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய ஆண்டுகளில் மெக்சிகோவில் குவானாஜுவாடோ நகரம் மிகவும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் திருடப்பட்ட எரிபொருளை கடத்தும் கும்பல்களால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு உள்ள மதுபான விடுதி கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மதுபான விடுதியில் இருந்த ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் கொல்லப்பட்டனர். 2 பெண்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த பெண்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிக்கு மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படை பிரிவுகள் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர். மெக்சிகோவின் தொழில்துறை மையமான குவானாஜுவாடோ பகுதியில், சமீபத்திய ஆண்டுகளில் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் இரபுவாடோ நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோ ஜனாதிபதியாக 2018 இல் பதவியேற்ற ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், மெக்சிகோவில் தலைவிரித்தாடும் கும்பல் வன்முறையைக் குறைப்பதாக உறுதியளித்திருந்தார். எனினும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
மெக்சிகோவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த ஆயுதங்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)