மேலும் அறிய

Srilanka New President: கோத்தபய ராஜினாமா செய்துள்ள நிலையில்; பதவிக்கு வர துடிக்கும் கட்சிகள்;மக்கள் கேட்பது என்ன?

இலங்கையில் கோத்தபய ராஜினாமா செய்துள்ள நிலையில், பதவிக்கு வர பல்வேறு கட்சிகள் போட்டி போட்டு வருகின்றனர்இலங்கை அரசியலமைப்பின் படி அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும்-ஐக்கிய நாடுகள் சபை

புதிய அதிபரை தேர்வு செய்யும் நிலை:
 
இலங்கையில் அதிபர் கோத்தபாய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அங்கு தற்போது புதிய அதிபர், பிரதமர் ஆகியோரை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாமல் தத்தளித்த மக்கள், வீதிகளில் இறங்கி, அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டம் புரட்சியாக வெடித்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பொதுமக்கள் அதிபரின் மாளிகை, அதிபர் இல்லம் ,பிரதமர் செயலகம் பிரதமரின் இல்லம், என அனைத்தையும் கைப்பற்றி தம் வசம் வைத்திருந்தனர்.
 
அரசியல் கட்சிகளிடையே பலமுனை போட்டி:
 
அதன் பின்னரே தற்போது இலங்கையின் அரசியலில் மாற்றம் செய்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் முன் வந்திருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதிபர் பதவி, பிரதமர் பதவியை கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே பலமுனை போட்டி நிலவுகிறது. மக்கள் படும் கஷ்டங்கள், துயரங்களை பாராமல் பதவிக்காக அடித்துக் கொள்ளும் நிலைமை, இன்னும் அங்கு முடிவடையவில்லை. பெரும்பான்மை சிங்கள கட்சிகள் தங்களிடையே மோதிக் கொள்ளும் நிலைமை தற்போது அங்கே ஏற்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அதிக அளவு அமைச்சர்களை கொண்டிருக்கும் கோத்தபய ராஜபக்சவின் கட்சியினர், மக்கள் விடுதலை முன்னணி ,ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி என பெரும்பாலான சிங்கள கட்சிகள் தத்தமது வேட்பாளர்களை முன்னிறுத்த திட்டமிட்டு வருகிறது.

Srilanka New President: கோத்தபய ராஜினாமா செய்துள்ள நிலையில்; பதவிக்கு வர துடிக்கும் கட்சிகள்;மக்கள் கேட்பது என்ன?
 
தேர்தலை கோரும் மக்கள்:
 
யாரும் மக்களின் பிரச்சினைகளை பார்க்கவில்லை, தமது கட்சி ,தமது குடும்பம்,  என்ற ஒரு நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பதவி ஆசை இன்னும் போகவில்லை என்பது அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது தெளிவாக புரிகிறது. ஆனாலும் இலங்கை மக்கள் கேட்டுக் கொண்டிருப்பது அரசியலமைப்பின் படி ஒரு தேர்தலையே. 
 
ராஜபக்சவினரின் ஆட்சியை வேண்டாம் என  மக்கள் தூக்கி எறிந்தார்கள். ஆனாலும் மீண்டும் அந்த கட்சியை சார்ந்த அமைச்சர்களும், உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் அதிக அளவில் இருக்கும் போது, எவ்வாறு மக்கள் கேட்கும் நியாயமான புது அரசு உருவாக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே  ஒரு நிரந்தரமான  பொருளாதார தீர்வு, அரசியல் தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 
 
ஐ.நா கூறுவது என்ன?:
 
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின்படி அதிகார மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அது அமைதியான முறையில் நடைபெற வேண்டும் எனவும் ஐநா தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்களிடையே நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாலும் ,பொருட்களின் விலை பன் மடங்கு அதிகரித்ததாலும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி பல மாதக்கணக்காக போராடி, அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டு இருப்பதாக  ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
மக்கள் எதிர்பார்ப்பு:
 
இலங்கையை நான்காக கூறு போட்டு பிரிப்பதற்கு முனைந்த‌ சில நாடுகள் தற்போது ஏன் வேடிக்கை பார்த்துக்  கொண்டிருக்கின்றன என்பது தான் புரியவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தவிர்த்து விட்டு ,உலக நாடுகள் தற்போதாவது முன்வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் அரசியலமைப்பு முறைப்படி தேர்தலை நடத்தி அதிபர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget