மேலும் அறிய

Cholera Outbreak: உலகுக்கே ஒரு அலர்ட்.. மீண்டும் தலைதூக்கும் காலரா நோய்த்தொற்று.. நிதியுதவி கேட்கும் உலக சுகாதார நிறுவனம்..

இந்த வாரத்தில் மட்டும், மூன்று நாடுகளில், காலரா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என  WHO காலரா குழு தலைவர் பிலிப் பார்போசா வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த வாரத்தில் மட்டும், மூன்று நாடுகளில், காலரா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என  WHO காலரா குழு தலைவர் பிலிப் பார்போசா வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முதன்முறையாக, உலக சுகாதார நிறுவனம் காலரா பாதிப்புகளை எதிர்த்துப் போராட நிதி உதவி கேட்டுள்ளது என குறிப்பிட்டார். தற்போது, ​​உலகெங்கிலும் உள்ள 22 நாடுகள் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். 2022 ஆம் ஆண்டில் காலரா தொற்றுகள் அதிகரித்தன, பல ஆண்டுகளாக தொற்று குறைந்த நிலையில் தற்போது இது அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் செயல்படும் ஆறு பிராந்தியங்களில் ஐந்து பிராந்தியங்களில் காலரா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என பிலிப் பார்போசா குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய WHO அறிக்கையில், 2022 முதல் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறுமை, பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்ற விளைவுகள் ஆகியவை சுத்தமான நீர் மற்றும் சுகாதாரமான சூழலை மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இது நோய்தொற்று பரவுவதற்கான முக்கிய காரணிகள் என டாக்டர் பார்போசா கூறியுள்ளார். இந்த சூழலை கையாள தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் சோதனைக் கருவிகள் மிகவும் அவசியமான ஒன்று, ஆனால் தற்போது குறைந்த எண்ணிக்கையில் தான் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் 37 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது, அடுத்த ஆண்டுக்குள் இவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைய சூழலில் உலக சுகாதார நிறுவனம் முதன்முறையாக காலரா நோய்தொற்றை சமாளிக்க $25 மில்லியன் நிதியை வழங்க  வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகில் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரமான சூழல் பெரும்பாலானோருக்கு கிடைப்பது இல்லை. இவை இரண்டும் மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை தேவையாகும். சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் இருந்தாலே காலரா நோய்த்தொற்றை ஒழித்து விடலாம் எனக் கூறுகின்றனர்.  ஆப்பிரிக்காவில் காலரா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொசாம்பிக்கில் ஃப்ரெடி புயலின் தாக்கத்திற்கு பின் நிலமை மோசமடைந்துள்ளது.  முதலில், செப்டம்பர் மாதம் நியாசா மாகாணத்தில் உள்ள லாகோ மாவட்டத்தில் காலரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

பிப்ரவரி 19 நிலவரப்படி, மொசாம்பிக் பகுதியில்  மொத்தம் 5,237 பேர் காலரவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலரா பாதித்த ஆறு மாகாணங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாகும், மழைக்காலம் தொடர்வதால் பாதிப்பு அதிகரிக்கும் என WHO தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 ஜனவரி 2023 நிலவரப்படி, 10 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 26,000 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 660 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட 15 நாடுகளில், கிட்டத்தட்ட 80,000 பேருக்கு காலரா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்,  இதில் 1,863 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான மலாவி 20 ஆண்டுகளில் மிக மோசமான காலரா பாதிப்பை எதிர்கொள்கிறது, மேலும் எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா உள்ளிட்ட பிற நாடுகளில் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன என்று WHO தெரிவித்துள்ளது. உலகளவில், ஹைட்டி, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியாவில் உள்ள மக்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
ABP Premium

வீடியோ

Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Tamilnadu Roundup: திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
திமுக மொபைல் செயலி இன்று அறிமுகம், வாக்காளர் சிறப்பு முகாம், தங்கம் விலை குறைவு - 10 மணி செய்திகள்
Embed widget