மேலும் அறிய

ERS Grandfather Satellite: செயலிழந்த ஈ.ஆர்.எஸ் செயற்கைக்கோள்.. பூமியில் விழும் அபாயம்.. விண்வெளி நிறுவனம் எச்சரிக்கை..

1995 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ஈ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் தற்போது பூமியை நோக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1995 ஆம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. ஈ.ஆர்.எஸ் கிராண்ட்பாதர் என்ற விண்கலனை விண்ணில் செலுத்தி ஐரோப்பா நிறுவனம் கட்டுப்படுத்தி செயல்பாட்டில் வைத்திருந்தது.  

பூமியை கண்காணிக்க தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை போல் இல்லாத வகையில் உருவாக்கிய முதல் அதிநவீன கண்காணிப்பு தளங்களில் இதுவும் ஒன்றாகும். பல ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்த இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டார பாதையில் இருந்து விலகியுள்ளது. இதனால் கிரான்பாதர் செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் இறுதிக்குள் இது பூமியில் விழலாம் என கணிக்கப்பட்டுள்ளது.  

இரண்டு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை கீழே விழும் போது எரிந்து விடும் என்று இந்த செயற்கைக்கோளை உருவாக்கிய ஐரோப்பா விண்வெளி நிறுவனம் (ESA) தெரிவித்துள்ளது. மேலும், செயற்கைக்கோள்கள் பூமியை நோக்கி இறங்கும்போதும், அவை வளிமண்டலத்தில் நுழையும் போதும் ஏற்படும் கடுமையான வெப்பத்தை தாங்கக்கூடிய சில வலுவான பாகங்கள் இருக்கலாம், ஆனால் அவை மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது செயற்கைக்கோள் கட்டுபடுத்த முடியாது என்பதால் அது எங்கே விழும் என்று யூகிக்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை கடலில் விழ வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா விண்வெளி நிறுவனத்தின்படி, ERS-2 மற்றும் ERS-1 செயற்கைக்கோள்கள் உலகின் மிக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களாக இருந்தன. இதனால் தான் இரண்டு செயற்கைக்கோள்களும் " கிராண்ட் பாதர்” என அழைக்கப்படுகிறது.  இந்த செயற்கைக்கோள்கள் நிலம், பெருங்கடல்கள் மற்றும் துருவத்தில் இருக்கும் தகவல் மாற்றங்கள் போன்ற பூமியைப் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கின. கடுமையான வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகளை கண்காணிக்கவும், காலநிலை நெருக்கடி குறித்த மதிப்புமிக்க தரவுகளை வழங்கவும் அவை பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 16 ஆண்டுகள் சேவைக்கு பின் ஆயுட்காலம் முடிந்து சுற்றுப்பாதை விட்டு விலகியுள்ளது.  கிராண்ட்பாதர் செயற்கைக்கோளில் இருந்து கிடைத்த தரவுகள் சுமார் 4,000 அறிவியல் வெளியீடுகளை உருவாக்கியதோடு,  5,000 க்கும் மேற்பட்ட திட்டங்களை வகுக்க உதவி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Embed widget