Epstein Files Row: மன்னர் பரம்பரைய மாட்டி விட்டுட்டீங்களே.! எப்ஸ்டீன் விவகாரம்; பிரிட்டன் மன்னரின் சகோதரர் கைது
Prince Charles Brother Arrest: எப்ஸ்டீன் கோப்புகளில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டனின் பெயர் இடம்பெற்றதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்க எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் இடம்பெற்றது. பிபிசி அறிக்கையின்படி, பிரிட்டிஷ் போலீசார், ஆண்ட்ரூ அவரது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர். அவர் தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடும் போது கைது செய்யப்பட்டார்.
புகார் அடிப்படையில் ஆண்ட்ரூ மீது பதியப்பட்ட வழக்கு
கடந்த வாரம், பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறையில் ஆண்ட்ரூ மீது புகார் அளிக்கப்பட்டது. எப்ஸ்டீனுடன் வணிக ஆவணங்களை பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், முடியாட்சி எதிர்ப்பு ஆர்வலர் ஒருவரால் இந்த புகார் அளிக்கப்பட்டது. வர்த்தக தூதர்கள் அந்த பதவியில் இல்லாவிட்டாலும், அவர்களின் பயண விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று சட்டப்படி கடமைப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், குற்றவியல் விசாரணையைத் தொடங்குவது குறித்து சட்டப் பிரதிநிதிகளுடன் விவாதித்து வருவதாக, தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை தெரிவித்துள்ளது. 2010 முதல் 2015-ம் ஆண்டு வரை, வர்த்தக வாரியத்தின் தலைவராக பணியாற்றிய வின்ஸ் கேபிள், ஆண்ட்ரூஸ் தனது வர்த்தக தூதர் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியதாக, லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Thames Valley Police have opened an investigation into an offence of misconduct in public office.
— Thames Valley Police (@ThamesVP) February 19, 2026
A man in his sixties from Norfolk has been arrested and remains in police custody. As per national guidance we will not name the arrested man.
Read more: https://t.co/wehZDx4InV pic.twitter.com/b23l2KeOHG
கடந்த ஆண்டு, நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டதுடன், அவரது ராயல் லாட்ஜையும் காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கை, மன்னரின் சகோதரர் இப்போது ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சராகவே அறியப்படுவார் என்பதை தெளிவுபடுத்தியது.
எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்ற ஆண்ட்ரூவின் பெயர்
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டனின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளுடன் தொடர்புடையது. அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டனுடன் உடலுறவு கொள்ள எப்ஸ்டீன் தன்னை பிரிட்டனுக்கு கடத்திச் சென்றதாக ஒரு பெண் குற்றம் சாட்டினார். பிரிட்டிஷ் வர்த்தக தூதராக பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவருடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக அந்தப் பெண் கூறினார். இருப்பினும், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார்.
எப்ஸ்டீன் கோப்பில் உள்ள பிரபலங்களின் பெயர்கள்
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய எப்ஸ்டீன் கோப்புகளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்க், பில் கேட்ஸ், மைக்கேல் ஜாக்சன், மிக் ஜாகர், கெவின் ஸ்பேஸி, எஹுட் பராக், லாரி சம்மர்ஸ், பில் ரிச்சர்ட்சன், பிரின்ஸ் ஆண்ட்ரூ, லெஸ் வெக்ஸ்னர், நோம் சாம்ஸ்கி மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில், பிரதமர் மோடியின் பெரும் அதில் பல இடங்களில் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.























