மேலும் அறிய

உளவு கப்பல் விவகாரம்..! இந்தியாவின் கோரிக்கையை கிடப்பில்போட்ட இலங்கை!? நினைத்ததை முடித்த சீனா!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை இலங்கை அரசின் உயர் மட்ட அலுவலர்கள் சனிக்கிழமை அன்று உறுதி செய்துள்ளனர். சீன ஆராய்ச்சி கப்பலால் இந்தியாவின் ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையிலும், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யுவான் வாங் 5 என்ற அந்த கப்பல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனக்கூறப்படும் நிலையில், உளவு பார்க்கவும் அந்த கப்பல் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாலும் இலங்கையில் செல்வாக்கு செலுத்துவதையும் இந்தியா சந்தேக கண்களிலேயே பார்த்து வருகிறது.

யுவான் வாங் 5 கப்பல், முதலில் ஆகஸ்ட் 11 அன்று இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவிருந்தது. பின்னர், இந்தியா கவலை தெரிவித்ததையடுத்து, கப்பல் வருகையை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனாவிற்கு இலங்கை கோரிக்கை விடுத்தது.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியா கவலை தெரிவித்த போதிலும், கப்பலை ஏன் நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்பது குறித்து திருப்திகரமான பதிலை அளிக்க இந்திய தரப்பு தவறிவிட்டதாக இலங்கை அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த விவகாரம் குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆகஸ்ட் 12, 2022 அன்று சீன தூதரகம் மூலம் அமைச்சகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் 16 ஆகஸ்ட் 2022 அன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டு, பொருள்களை நிரப்ப அனுமதி கோரி விண்ணப்பித்தது.

அனைத்து ஆவணங்களையும் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 13, 2022 அன்று, கப்பலுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சீன தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது" என விளக்கம் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் சீனக் கப்பல் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகத்தை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்ததாக இலங்கை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 பில்லியன் டாலர்களுக்கு 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு இலங்கை குத்தகைக்கு வழங்கியுள்ளது. அதனைக் கட்டுவதற்கு சீன நிறுவனத்திற்கு இலங்கை 1.4 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புக்கு யுவான் வாங் 5 பயன்படுத்தப்படலாம் என்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பயன்பாடுகளை அக்கப்பல் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump on Tariffs: “இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
“இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
Russia's Massive Attack: ஆத்தாடி.!! 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகளை வைத்து தாக்கிய ரஷ்யா - பற்றி எரியும் உக்ரைன்
ஆத்தாடி.!! 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகளை வைத்து தாக்கிய ரஷ்யா - பற்றி எரியும் உக்ரைன்
இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்; ஈபிஎஸ் சூளுரை!
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்; ஈபிஎஸ் சூளுரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump on Tariffs: “இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
“இதுக்கு மேல மாத்த மாட்டேன், ஆகஸ்ட் 1 தான் கடைசி“ - ட்ரம்ப் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?
Russia's Massive Attack: ஆத்தாடி.!! 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகளை வைத்து தாக்கிய ரஷ்யா - பற்றி எரியும் உக்ரைன்
ஆத்தாடி.!! 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகளை வைத்து தாக்கிய ரஷ்யா - பற்றி எரியும் உக்ரைன்
இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
இது புதுசா இருக்கே… இனி கடைசி பெஞ்ச்சே கிடையாது; பள்ளிகளில் புது இருக்கை முறை அறிமுகம்!
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்; ஈபிஎஸ் சூளுரை!
மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்; ஈபிஎஸ் சூளுரை!
Chennai Power Shutdown(Jul 10th): சென்னையில நாளைக்கு எங்கெங்க மின்சார துண்டிப்பு பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? இத படிங்க
சென்னையில நாளைக்கு எங்கெங்க மின்சார துண்டிப்பு பண்ணப் போறாங்கன்னு தெரியுமா.? இத படிங்க
Thirumavalavan: எஸ்.சி, எஸ்டி மக்களுக்கு ஆதரவாக பேச அரசியல் கட்சிகளுக்கு பயம்... திருமாவளவன் ஆதங்கம்
Thirumavalavan: எஸ்.சி, எஸ்டி மக்களுக்கு ஆதரவாக பேச அரசியல் கட்சிகளுக்கு பயம்... திருமாவளவன் ஆதங்கம்
Avadi Bus Depot: ஆவடி மக்களுக்கு ஜாக்பட்; ரூ.36 கோடியில் நவீனமாகும் பேருந்து நிலையம், மெட்ரோ இணைப்பு - முழு விவரம்
ஆவடி மக்களுக்கு ஜாக்பட்; ரூ.36 கோடியில் நவீனமாகும் பேருந்து நிலையம், மெட்ரோ இணைப்பு - முழு விவரம்
New Mexico Flash Flood: மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
மெக்சிகோவை புரட்டிப்போட்ட காட்டாற்று வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட வீடு - அதிர்ச்சி வீடியோ
Embed widget