மேலும் அறிய

Yuan wang 5: சொல்லியும் கேட்காத சீனா! தொடர்ந்து முன்னேறும் உளவுக்கப்பல்! உஷாராகும் இந்திய கடற்படை!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனாவின் உளவுக்கப்பல் வந்துகொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனக்கப்பலை அனுமதிக்ககூடாது என இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்த நிலையிலும், சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனாவின் உளவுக்கப்பல் வந்துகொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இந்திய கப்பற்படை மேலும் உஷாராக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் கப்பல்..

சீன நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு கப்பல்தான் 'யுவான் வாங் 5’. யுவான் வாங் 5 என்ற சீனக் கப்பலானது, தேவையான எரிபொருள்களை நிரப்புவதற்கு இலங்கையிடம் அனுமதி கோரி இருந்தது. ஆகஸ்ட் 11 முதல் 17 வரை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்படும் என்றும் சீனா குறிப்பிட்டிருந்தது. குறிப்பிட்ட அந்த சீனக் கப்பல் மிகவும் திறன் வாய்ந்த, அதிநவீன உதிரிபாகங்களைக் கொண்ட மேம்பட்ட கடற்படைக் கப்பல் என்பதால் இந்த விவகாரம் பேசுபொருளானது. இந்தியாவுக்கு ஒரு வகையில் அச்சுறுத்தல் நாடாக பார்க்கப்படும் சீனாவின் உளவுக்கப்பல் என்பதால் 'யுவான் வாங் 5’ கப்பலை உற்றுநோக்கின இந்திய ஊடகங்கள்.


Yuan wang 5: சொல்லியும் கேட்காத சீனா! தொடர்ந்து முன்னேறும் உளவுக்கப்பல்! உஷாராகும் இந்திய கடற்படை!

இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரும் என தொடர்ந்து செய்திகள் வெளியாகின .ஊடகங்களின் செய்திகளுக்கு விளக்கம் அளித்த இந்திய அரசு நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்தது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவில் கப்பலை அனுமதிக்க வேண்டாமென இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட இலங்கையும், 'இந்த பயணத்தை முன்னெடுக்க வேண்டாம் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திடம் தெரிவித்தது. "யுவான் வாங் 5 கப்பலை ஹம்பாந்தோட்டைக்கு வந்தடையும் தேதியை இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்படும் வரை ஒத்திவைக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது" என ஒரு கடிதத்தையும் இலங்கை அனுப்பியது. இது குறித்து பேசிய இலங்கை அதிபரான ரணில் விக்கிரமசிங்கவும், இந்த சர்ச்சைக்குரிய பயணம் திட்டமிட்டபடி நடக்காது என்று உறுதியளித்திருந்தார்.

தொடர்ந்து முன்னேறும் கப்பல்..

சீனக்கப்பலை அனுமதிக்ககூடாது என இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்த நிலையிலும்,  சீனாவின் கப்பல் வந்துகொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

செவ்வாய்க்கிழமை நிலைமையின்படி வேகத்தை அதிகரித்த யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிக்கல்மைல் தூரத்தை அடைந்தது. பின்னர் புதன்கிழமைவாக்கில் வேகத்தை குறைத்த அந்தக்கப்பல்  அந்தமான் தீவை நோக்கி பயணத்தை திருப்பியதாக கூறப்பட்டது. திசை மாறியதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் அந்தக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அழுத்தத்தையும் மீறி சீனாவின் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நெருங்குவதால் இந்தியா தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.


Yuan wang 5: சொல்லியும் கேட்காத சீனா! தொடர்ந்து முன்னேறும் உளவுக்கப்பல்! உஷாராகும் இந்திய கடற்படை!

சீன கப்பலால் ஆபத்தா?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் கப்பல் வருவதால் இந்தியாவுக்கு ஏதும் பாதிப்பு உண்டா அல்லது இந்த கப்பல் நகர்வு இலங்கைக்கு வைக்கப்பட்ட குறியா என்பதை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அப்போதும் இதே சிக்கல்..

2014ஆம் ஆண்டு இரண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தபோதும் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்ட விவரத்தை இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ சீனா தெரிவிக்கவே இல்லை. அப்போது சீனா, நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியதைக் கூட, இலங்கைக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் சீன ஆதிக்கம்  ஏன்?

கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கையின் தென் பகுதியில் அதிக சிங்களவர்கள் வாழும், ராஜபக்சவினரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் அமைந்திருக்கிறது இந்த துறைமுகம். இந்த ஹம்பாந்தோட்டை துறைமுகம், அதிக வட்டியுடனான சீன கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறைமுக நிர்மாணத்திற்காக சீனாவிடம் இருந்து பெற்ற கடனை  இலங்கையால் திரும்ப செலுத்த  முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த துறைமுகத்தின் மீது சீனாவின் ஆதிக்கம் அதிக அளவில்  இருந்து வருகிறது. 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget