மேலும் அறிய

"வீட்டை விட்டு வெளியே வர முடியாது…", டச்சு இளவரசி அமாலியாவுக்கு பலத்த பாதுகாப்பு… ஏன்?

"அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது" என்று ராணி மாக்சிமா தனது கணவர் கிங் வில்லெம்-அலெக்சாண்டருடன் ஸ்வீடனுக்கு அரசுமுறைப் பயணத்தின் போது கூறியதாக ANP மேற்கோளிட்டுள்ளது.

நெதர்லாந்து பட்டத்து இளவரசி கத்தரினா-அமாலியாவுக்கு தேச விரோத சக்திகளால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக நெதர்லாந்து செய்தி நிறுவனம் ANP வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இளவரசிக்கு கடுமையான பாதுகாப்பு

"அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது" என்று ராணி மாக்சிமா தனது கணவர் கிங் வில்லெம்-அலெக்சாண்டருடன் ஸ்வீடனுக்கு அரசுமுறைப் பயணத்தின் போது கூறியதாக ANP மேற்கோளிட்டுள்ளது. டச்சு சிம்மாசனத்தின் வாரிசு 18 வயதான அமலியா, கடந்த மாதம் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடங்கினார். அதற்காக ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார். ஆனால் அவரது பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக அவரை ஹேக் நகரில் உள்ள ஹுயிஸ் டென் போஷ் அரச அரண்மனைக்குத் திரும்பி வரும்படி கட்டாயப்படுத்தியதாக அரச தம்பதியினர் தெரிவித்தனர். 

கிரிமினல் கும்பலால் கடத்தப்படும் அச்சம்

கடந்த மாதம், பல டச்சு ஊடகங்கள், இளவரசி, என்ற முறைப்படி, கிரிமினல் கும்பல் அவரைக் கடத்தக்கூடும் என்றோ, தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவோ, அதிகப் பாதுகாப்பில் இருப்பதாகத் தெரிவித்தன. இவரை கடத்தி அரசவையை பயமுறுத்தும் நோக்கமோ, அவரை தாக்கும் நோக்கமோ நாட்டின் எதிரிகளுக்கு இருப்பதாக டட்ச் அரசு கருதுகிறது.

தொடர்புடைய செய்திகள்: Student Murder in Thomas Mount : ”இப்படித்தான் திட்டமிட்டு கொலை செய்தேன்” : மாணவி படுகொலை.. கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்...

அச்சுறுத்தலுக்கு காரணம் யார்

இந்த நிலையில் இந்த அச்சுறுத்தலுக்கு காரணம் யார் என்று இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கான பாதுகாப்புக்கு எந்த அளவில் உள்ளன என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. ராயல் ஹவுஸைச் சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வெளியில் கூற நெதர்லாந்து காவல்துறை மற்றும் நாட்டின் ரகசிய சேவை மறுத்துவிட்டன. வியாழன் மாலை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அச்சுறுத்தல்கள் எங்கிருந்து வந்தது என்கிற விவரங்களைக் குறிப்பிட முடியாது என்று கூறினார்.

சாதாரண மாணவரின் வாழ்க்கை இல்லை 

இளவரசி அமாலியா கடந்த மாதம் தனது அரசியல் மற்றும் பொருளாதாரப் பட்டப்படிப்பை ஆம்ஸ்டர்டாமில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் வீடு திரும்புவதற்கு முன்பு ஆம்ஸ்டர்டாமிலேயே, தன்னோடு படிக்கும் பல மாணவர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அரண்மனையில் இருந்து இதுகுறித்து மாக்சிமா பேசுகையில், "முதலில் இது அவருக்கு ஒரு பயங்கரமான செய்தி, சம்பந்தப்பட்ட அனைவரும் அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். இதன் விளைவுகள் அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும். மற்றவர்களையோ போல அவரால் சாதாரண மாணவர் வாழ்கையை வாழ முடியாது", என்று கூறியதாக ANP மேற்கோளிட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget