மேலும் அறிய

சூட்கேஸுக்குள் பன்றிகளின் உடல்களை அடைத்த ஆராய்ச்சியாளர்கள்.. எதனால் தெரியுமா..?

மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி கிட்டத்தட்ட 70 இறந்த பன்றி உடல்களை அழுகுவதற்கு விஞ்ஞானிகள் சூட்கேஸ்களில் அடைத்து விட்டுச்சென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா: மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி கிட்டத்தட்ட 70 இறந்த பன்றி உடல்களை அழுகுவதற்கு விஞ்ஞானிகள் சூட்கேஸ்களில் அடைத்து விட்டுச்சென்றுள்ளனர். இதன் மூலம், தீவிர சூழ்நிலைகளில் உடலின் சிதைவு செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கும், கொலைச் சம்பவங்களை குற்றவியல் புலனாய்வாளர்கள் மறுகட்டமைக்க உதவுவதற்கும் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சூட்கேஸின் உள்ளேயும் வெளியேயும் இறந்த விலங்குகளை எந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் மாற்றுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அளவிடப்படுகிறது. மேலும், நுண்ணுயிரியல் மாற்றங்களுடன் எலும்புகள் மற்றும் உடலின் இரசாயன மாற்றங்களும் கவனிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இறந்த பன்றியின் உடல்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்ட காரணம்..? 

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனித உடல்கள் கொலை செய்யப்பட்டு அந்த கொலையை மறைக்க கொலையாளிகள் சூட்கேஸ்கள், வீலி பின்கள் (குப்பை தொட்டி), கார் பூட்ஸ், ஃப்ரிட்ஜ்கள் போன்ற இறுக்கமான பொருட்களில் வைக்கப்படுகின்றனர். இதன்மூலம், கொலைகாரர்கள் உடலை மறைத்து தங்கள் தடங்களை மறைக்க இந்த முறைகளைப் பயன்படுத்தியதற்கு பல ஆதாரங்கள் அவ்வபோது வெளிவருகிறது. 

இதுகுறித்து முர்டோக் பல்கலைக்கழகத்தின் மூத்த தடய அறிவியல் விரிவுரையாளரான பாவ்லா மாக்னி தெரிவிக்கையில், "குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கொலை செய்தவர்களை ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்துக்கு எடுத்து செல்ல முயற்சி செய்கின்றனர். இதற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்துவது சூட்கேஸ் மற்றும் தள்ளும் குப்பைத்தொட்டிகள்தான். இதன் ஆராய்ச்சி மூலம் கொலையாளிகளின் அடையாளம் மற்றும் தடயங்கள் கிடைக்கிறதா என்று முயற்சிக்கிறோம். 

கடந்த ஆண்டு பெர்த் அருகே உள்ள அணையில் வீசப்பட்ட குப்பை சக்கரத் தொட்டியில் ஒரு மனிதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது, அதேபோல், சில வாரங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் இரண்டு சூட்கேஸ்களில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை ஆராய்ச்சி மிகவும் தேவை என்பது இது  உறுதிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார். 

சூட்கேஸ்கள் போன்ற இறுக்கமான மூடப்பட்ட பொருட்களுக்குள் இறந்த உடலின் சிதைவு செயல்முறை பாதிக்கிறது. குறிப்பாக பூச்சிகள் உடலை அணுகும் தன்மையை தடை செய்து, சிதைவு தன்மையை குறைக்கிறது. இதன்மூலம், சிதைவு செயல்முறையின் இந்த மாற்றம், தடயவியல் நோயியல் நிபுணர் மற்றும் தடயவியல் பூச்சியியல் வல்லுநர்களின் இறந்த உடலின் மரணத்திலிருந்து நேரத்தை அளவீடு செய்யும் திறனை பாதிக்கிறது. 

ஒரு தடயவியல் நோயியல் நிபுணருக்கு மரணத்திலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு குறுகிய சாளரம் உள்ளது, அதே சமயம் பூச்சிகள் இருக்கும் மற்றும் நாட்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்கு தகவல்களை வழங்க முடியும் என்று தெரிவித்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24:  லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Embed widget