Donald Trump: ஒரு அளவுக்கு தான் ப்ரோ! பாடியே பாட்டையே பாடும் டிரம்ப்.. இதுக்கு முடிவு இல்லையா?
வாஷிங்டனின் நடந்த "நீண்ட இரவு" பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் "முழுமையான மற்றும் உடனடி" போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை "வர்த்தகம்" மூலம் "தீர்த்துவிட்டதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒரு முறை கூறியுள்ளார்.
டிரம்ப் பேச்சு:
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது பேசிய டிரம்ப் "நாங்கள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தால், நாங்கள் வர்த்தகம் மூலம் நான் அதை தீர்த்து வைத்தேன் என்று நினைக்கிறேன்," அமெரிக்கா இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் ஒரு "பெரிய ஒப்பந்தம்" செய்து வருவதாக அவர் கூறினார்.
நான் அவர்கள் இருவரிடம் பார்த்து நீங்கள் என்ன செய்கீறிர்கள் என்று கேட்டேன், யாராவது ஒருவர் இந்த துப்பாக்கி சூட்டை நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் துப்பாக்கிச் சூடு மோசமாகிக்கொண்டே போனது, பெரியதாகவும் நாடுகளுக்குள் ஆழமாகவும் சென்றது. நாங்கள் அவர்களிடம் பேசினோம், நாங்கள் அதை சரிசெய்துவிட்டோம் என்று சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன், பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஏதோ ஒன்று நடக்கிறது, அவ்வாறு நடந்தால் அது டிரம்பின் தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள்.
"ஆனால்... பாகிஸ்தானில் சில சிறந்த மனிதர்களும், சில நல்ல தலைவர்களும் உள்ளனர். இந்தியா பிரதமர் மோடி எனது நண்பட்," என்று டிரம்ப் கூறினார், அதற்கு தென்னாப்பிரிக்க ஜனாதிபதி "மோடி, பரஸ்பர நண்பர்" என்று பதிலளித்தார்."அவர் ஒரு சிறந்த மனிதர், நான் அவர்கள் இருவரையும் அழைத்தேன். இருவரும் வந்தது நல்லது என்று டிரம்ப் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்க்க "உதவியதாக" அமெரிக்க ஜனாதிபதி பலமுறை கூறி வருகிறார்.
பஹல்காம் தாக்குதல்:
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி அதிகாலை பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
இந்திய நடவடிக்கையைத் தொடர்ந்து, மே 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் இந்திய ராணுவத் தளங்களைத் தாக்க முயன்றது. இந்தியப் படைகள் பல பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது கடுமையான எதிர் தாக்குதலைத் தொடங்கின.
போர் நிறுத்தம்:
நான்கு நாட்கள் தீவிர எல்லை தாண்டிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, மே 10 அன்று இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டின.
மே 10 அன்று, வாஷிங்டனின் நடந்த "நீண்ட இரவு" பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் "முழுமையான மற்றும் உடனடி" போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்






















