மேலும் அறிய

‘குடிநீரில் கலந்த சாதி’ நீங்க இங்கே தண்ணீர் பிடிக்க கூடாது; குடிநீரில் விஷம் கலந்த விஷமிகள்..!

விழுப்புரம்: செஞ்சி அருகே சாதி பாகுபாடு காரணமாக தண்ணீரில் விஷம் கலந்ததாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பந்தூர் ஊராட்சியில் மொடையூர், கம்பந்தூர், துடுப்பாக்கம், தையூர் போன்ற பகுதிகளை இணைக்கும் சந்திப்பு சாலையில் பொதுமக்கள் குடிநீர் அருந்தும் வகையில் 600 லிட்டர் அளவு கொண்ட குடிநீர் டேங்க் மின் இணைப்பு உடன் கூடிய மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேங்கில் இருந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மொடையூர்  பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பந்தூர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் டேங்கில் இருந்து குடிநீர் எடுத்து செல்வது வழக்கம். இந்த டேங்கில் குடிநீர் சுவையாக இருப்பதால் பக்கத்து கிராம மக்கள் உட்பட ஏராளமான மக்கள்  குடிநீர் எடுத்து சொல்வது வழக்கமாக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் நாய்க்குட்டியை அடித்து அந்த வாட்டர் டேங்கில் போட்டுள்ளனர்.


‘குடிநீரில் கலந்த சாதி’ நீங்க இங்கே தண்ணீர் பிடிக்க கூடாது; குடிநீரில் விஷம் கலந்த விஷமிகள்..!

இதனைத் தொடர்ந்து, இன்று அந்த டேங்கில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை  மர்மநபர்கள் யாரோ கலந்துள்ளனர். காலையில் மக்கள் குடிநீர் எடுத்து செல்ல வந்தபோது தண்ணீரில் மருந்து நாற்றம் அடிப்பதாக சந்தேகமடைந்தனர். இதனால், மக்கள் நீரைக் குடிக்காமல் போலீசாருக்கும்,  வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த நீரினை மக்கள் கீழே கொட்டி டேங்கை அப்புறப்படுத்தினர்.


‘குடிநீரில் கலந்த சாதி’ நீங்க இங்கே தண்ணீர் பிடிக்க கூடாது; குடிநீரில் விஷம் கலந்த விஷமிகள்..!

தொடர்ந்து சமூக விரோதிகள் சாதி பாகுபாட்டை காரணம் காட்டி விஷம் வைத்து பொதுமக்களை கொள்ள சதி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக செஞ்சி காவல்நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி புகார் கொடுத்துள்ளார். செஞ்சி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மொடையூர், துடுப்பாக்கம்,  கம்பந்தூர் போன்ற பகுதி கிராம மக்கள் இதில் தொடர்புடைய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


‘குடிநீரில் கலந்த சாதி’ நீங்க இங்கே தண்ணீர் பிடிக்க கூடாது; குடிநீரில் விஷம் கலந்த விஷமிகள்..!

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மொடையூர் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். நங்கள் அந்த குடிநீரை பயன்படுத்தித்தான் சமையல் செய்கின்றோம். ஆதிதிராவிடர் என்பதால் நீங்கள் இந்த குடிநீரை எடுத்து செல்லகூடாது என மிரட்டல் விடுத்த நிலையில் தற்போது குடிநீரில் விஷம் கலந்துள்ளனர்” என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget