சாதிச் சான்றிதழ் முதல் பட்டா வரை... இனி வேலைகள் வேகம் எடுக்கும் - கலெக்டர் அதிரடி...
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் எவ்வித தாமதமுமின்றி சென்றடைய வேண்டும்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம் இன்று (13.05.2026) நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று (13.05.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக அரசின் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்றைய தினம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மூலமாக விண்ணப்பம் செய்துள்ள சாதிச் சான்றிதழ், உண்மைத் தன்மை சரிபார்ப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பொது விநியோகத் திட்டப் பணிகள், பட்டா மாற்றம், பட்டா மாற்றம் மேல் முறையீடு, இணைய வழி சான்றுகள் உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்பான பல்வேறு இனங்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விரிவாகக் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுமக்கள் இணையவழி சான்றிதழ்களை பெற விண்ணப்பங்களின் விவரங்கள் குறித்தும், பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பங்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறியப்பட்டது. வருவாய்த்துறை சம்மந்தமாக பொதுமக்கள் இ-சேவை மூலமாக விண்ணப்பம் செய்துள்ள சாதிச் சான்றிதழ், உண்மைத் தன்மை சரிபார்ப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பொது விநியோகத் திட்டப் பணிகள், பட்டா மாற்றம், பட்டா மாற்றம் மேல் முறையீடு, இணைய வழி சான்றுகள் போன்றவைகள் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உரிய விசாரணை மேற்கொண்டு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எழுக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வருவாய்த் துறையின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உடனுக்குடன் வழங்கவும், மேலும் அரசின் சேவைகள் அனைத்து பொதுமக்களிடம் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















