மேலும் அறிய

மக்களே தவறவிடாதீர்... வாக்காளர் பட்டியலில் விண்ணப்பிக்க, திருத்தம் செய்ய அரிய வாய்ப்பு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி தற்போது 100 சதவீதம் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் : வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் இறுதி செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரிலும் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுரையின்பேரிலும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் இறுதி செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 1966 வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்த வகையில் தேவைக்கேற்ப புதியதாக 02 வாக்குச் சாவடிகள் உருவாக்கம் செய்யவும், 02 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்யவும், 12 வாக்குச் சாவடி மையங்களை புதிய இடத்திற்கு மாற்றம் செய்யவும் மற்றும் 4 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் ஆகியவற்றினை இறுதி செய்யும் பொருட்டு சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.

பாகம் எண்: 64 மற்றும் வார்டு எண்: 8 - பாகம் 83 ஆகிய வாக்குச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனர். எனவே, பாகம் எண் 64-ஆனது இரண்டாக உருவாக்கப்பட்டு பாகம் எண்: 64 மற்றும் பாகம் எண் 65-ஆகவும், பாகம் எண் 84 ஆனது இரண்டாக உருவாக்கப்பட்டு பாகம் எண் 84 மற்றும் பாகம் எண் 85-ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சியில், வார்டு எண்: 28

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1968

இம்மாறுதலுக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1968 ஆகும். மேலும் 01.01.2025 நாளை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட உள்ளது.

புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் எனவும், இதன்படி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஜனவரி1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நான்கு தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திடும் வகையில் 17 வயது நிரம்பிய நபர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

100 சதவீதம் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி

விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 பூர்த்தியாகும் அடுத்த காலாண்டில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி தற்போது 100 சதவீதம் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்படி கணக்கெடுப்பிற்கு வரும்போது பொதுமக்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
"இதை மட்டும் பண்ணாதீங்க சிந்தனை திறன் குறையும்" மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அட்வைஸ்!
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Embed widget