மேலும் அறிய

மீன்பிடிப்பவர்கள் நலனுக்காக ஆற்றில் விடப்படும் வாணியாற்று நீர்- 3 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிட கோரிக்கை

’’ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் சென்றால் மூன்று ஏரிகளை உபரி நீர் மூலமாக நிரப்பிவிடலாம். இதனால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்’’

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை 65 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியிலிருந்து தண்ணீர் வருகிறது. தொடர்ந்து பருவமழை காலத்தில் ஆண்டுதோறும் வாணியாறு அணை நிரம்பி உபரி நீர்  வெளியேறி வருகிறது. இந்த அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் வழியாக மோளையானூர்,  வெங்கடசமுத்திரம், மெனசி ஆலாபுரம், தென்கரைக்கோட்டை, சாலூர், அதிகாரப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
 

மீன்பிடிப்பவர்கள் நலனுக்காக ஆற்றில் விடப்படும்  வாணியாற்று நீர்- 3 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிட கோரிக்கை
 
இந்நிலையில் வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில், உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உபரிநீர் முதலில் பழைய ஆயக்கட்டான ஆலாபுரம் ஏரி நிரம்பி, ஓந்தியாம்பட்டி, தென்கரை கோட்டை ஏரிகள் நிரம்பி, மீண்டும் ஆற்றில் சென்று அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. மேலும் மெனசி ஜீவா நகர் அருகே உள்ள ஒட்டிலிருந்து ஆற்றின்  வழியாக பறையப்பட்டி ஏரிக்கு திறந்து விடப்படும். இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் வசதி, நிலத்தடி நீர் அதிகரிக்கும்.
 

மீன்பிடிப்பவர்கள் நலனுக்காக ஆற்றில் விடப்படும்  வாணியாற்று நீர்- 3 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிட கோரிக்கை
 
இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பாகவே வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து வாணியாறு அணையில் இருந்து கடந்த வாரம் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க வேண்டும் என குத்தகைதாரர்கள் பொதுப்பணி துறை அதிகாரிகளை கவனித்து,  ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் வலியுறுத்தியதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து ஆற்றின் வழியாக பறைப்பட்டி புதூர் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பறையப்பட்டி புதூர் ஏரி நிரம்பியதும் தண்ணீர் வீணாக ஆற்றில் செல்லும் நிலைதான் இருந்து வருகிறது. ஆனால் ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி நிரம்பியதும், ஓந்தியம்பட்டி ஏரி, தென்கரைகொட்டை ஏரிகள் நிரப்பும். ஆனால் ஆலமரம் ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்தவரின் நலனுக்காக, கால அவகாசம் கொடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்காமல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். தற்பொழுது மழை தீவிரமடைந்து வருவதால்,  ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் சென்றால் மூன்று ஏரிகளை உபரி நீர் மூலமாக நிரப்பிவிடலாம். இதனால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
 

மீன்பிடிப்பவர்கள் நலனுக்காக ஆற்றில் விடப்படும்  வாணியாற்று நீர்- 3 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிட கோரிக்கை
 
ஆனால் பொதுப்பணித்துறை விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல், மீன் குத்தகைதாரர் சுயநலத்திற்காக தண்ணீரை ஆற்றில் திறந்து விட்டுள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பறையப்பட்டி புதூர் ஏரி நிரம்பியதும், தண்ணீர் வீணாக வாணி ஆற்றில் கலக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, விரைந்து ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
Madhampatty Rangaraj Case: மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு; ஜாய் கிரிசில்டாவிற்கு ஆறுதல்; போலீசாருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு; ஜாய் கிரிசில்டாவிற்கு ஆறுதல்; போலீசாருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
Madhampatty Rangaraj Case: மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு; ஜாய் கிரிசில்டாவிற்கு ஆறுதல்; போலீசாருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு; ஜாய் கிரிசில்டாவிற்கு ஆறுதல்; போலீசாருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Embed widget