மேலும் அறிய

மேல்மட்ட தவறுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது - நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்காவிடில் வரும் புதன்கிழமை மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்காவிடில் வரும் புதன்கிழமை மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 14 ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த வாரம் தமிழக அரசு வெல்லம், நெய், அரிசி, கரும்பு போன்ற 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பொங்கல் பரிசாக அறிவிக்கப்பட்டு தற்பொழுது தமிழகம் முழுவதும் நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது: நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சில பொருள்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக பரவலாக தகவல் வருகிறது.
 

மேல்மட்ட தவறுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது - நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கம்
 
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கூட்டுறவுத் துறை மூலம் 3 பொருள்களும், நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 17 பொருள்களும் வழங்கப்படுகின்றன. இதில் கூட்டுறவுத் துறை அளிக்கும் பொருள்கள் சரியாக உள்ளன. ஆனால், நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் அனுப்பப்படும் பொருள்கள் பல மாவட்டங்களில் எண்ணிக்கை குறைவாக உள்ளது.மேலும், 50 சதவீத பைகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ள நிலையில், மொத்தமாக கொடுத்துவிட்டதாகக் கூறுகின்றனா். அதே போல் வெல்லமானது கூழ் வெல்லமாக உள்ளது.
 

மேல்மட்ட தவறுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது - நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கம்
 
 
இதுபோல, மேல்மட்டத்தில் நடக்கும் தவறுகளுக்கு நியாய விலைக் கடை பணியாளா்கள் பொறுப்பேற்க வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இது போன்ற பிரச்னையால் சேலம் மாவட்டத்தில் நியாய விலைக் கடை பணியாளா் ஒருவா் பொதுமக்களால் திங்கள்கிழமை தாக்கப்பட்டாா். பணிப் பளு கருதி பணியாளா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்குமாறு கோரினோம். ஆனால், ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்குவதாக அறிவித்து உள்ளனா். இதை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும், நாள் ஒன்றுக்கு ரூ.300 ஊதியத்தில் தினக்கூலி பணியாளா்களை ஏற்பாடு செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
 

மேல்மட்ட தவறுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது - நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கம்
 
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்காவிடில், வரும் 12-ஆம் தேதி சங்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம் என்று கூறினார். பேட்டியின் போது சங்கத்தின் மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவா் துரை.சேகா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் கு.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget