மேலும் அறிய

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் தர்ணா

பட்டா இல்லாத மக்களை மட்டும் வெளியேறும்படி என்எல்சி நிறுவனம் மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும். முன்னரே இது சம்பந்தமாக 2021 ஆம் ஆண்டு தனி சார் ஆட்சியரிடம் (நில எடுப்பு) மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, இதேபோல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டமும் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.மேலும் தங்கள் குறைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து இருக்கும் புகார் மனு பெட்டியில் போடுமாறு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது கடந்த சில வாரங்களாக புகார் பேட்டியல் மனு அளித்து வருகின்றனர்.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் தர்ணா
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடக்கு வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில் விருத்தாச்சலம் வட்டம் வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பல வருடங்களாக வசித்து வரும் தங்களை தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பணிகளை காரணம் காட்டி சட்டவிரோதமாக எங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். 

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் தர்ணா
 
இப்பகுதியில் அருந்ததியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்கள் பல வருடங்களாக வசித்து வரும் நிலையில் சட்ட விரோதமாக அப்புறப் படுத்த முயலும் நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களை வெளியேற்ற வேண்டும் என்றால் எங்களுக்கு மாற்று இடம் மற்றும் மறுவாழ்வு சட்டங்களுக்கான சலுகைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்திட வேண்டும், ஆனால் அதற்கு முன்பாக தற்போது நில கையகப்படுத்தும் சட்டத்தின் படி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் எங்களை அச்சுறுத்தி வெளியேற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினர்.
 

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் தர்ணா
 
ஆனால் வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் வசிக்கும் பட்டா தாரர்களுக்கு இதுவரை நில கையகப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வழங்கப்படவில்லை. எனவே பட்டா இல்லாத மக்களை மட்டும் தனிமைப்படுத்தி வெளியேறும்படி என்எல்சி நிறுவனம் மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னரே இது சம்பந்தமாக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனி சார் ஆட்சியரிடம் (நில எடுப்பு) மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதித்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் நள்ளிரவு கோரம்: தூக்க கலக்கத்தில் எமனாக வந்த லாரி - பேருந்து கவிழ்ந்து வங்கி ஊழியர் பலி!
திண்டிவனத்தில் நள்ளிரவு கோரம்: தூக்க கலக்கத்தில் எமனாக வந்த லாரி - பேருந்து கவிழ்ந்து வங்கி ஊழியர் பலி!
Puducherry Election 2026 : ஆட்டம் காணும் மெகா கூட்டணிகள்... புதுச்சேரி தேர்தல் களம் இனி 'திக் திக்' ரகம்!
Puducherry Election 2026 : ஆட்டம் காணும் மெகா கூட்டணிகள்... புதுச்சேரி தேர்தல் களம் இனி 'திக் திக்' ரகம்!
வாக்காளர்களுக்கு விருந்து வைத்தால் 'ஆப்பு'! விழி பிதுங்கும் வேட்பாளர்கள்... தேர்தல் ஆணையத்தின் புதிய செக்-மேட்!
வாக்காளர்களுக்கு விருந்து வைத்தால் 'ஆப்பு'! விழி பிதுங்கும் வேட்பாளர்கள்... தேர்தல் ஆணையத்தின் புதிய செக்-மேட்!
பாறையில் ஒளிந்திருந்த பொக்கிஷம்: செஞ்சி அருகே கண்டெடுக்கப்பட்ட அபூர்வ கல்வெட்டு!
பாறையில் ஒளிந்திருந்த பொக்கிஷம்: செஞ்சி அருகே கண்டெடுக்கப்பட்ட அபூர்வ கல்வெட்டு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?
Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
IPL 2026: விக்கெட் மட்டுமல்ல... ரன்களுக்கும் 'நோ'! ஐபிஎல்-ல் பேட்டர்களை ஓடவிட்ட ஆர்சிபி ஸ்பெஷலிஸ்ட்கள்
IPL 2026: விக்கெட் மட்டுமல்ல... ரன்களுக்கும் 'நோ'! ஐபிஎல்-ல் பேட்டர்களை ஓடவிட்ட ஆர்சிபி ஸ்பெஷலிஸ்ட்கள்
Embed widget