மேலும் அறிய

புதுச்சேரியில் கிட்னி திருட்டு: ஏழை மக்களின் உயிரைப் பறிக்கும் மோசடி! அதிர்ச்சி தகவல்

புதுச்சேரியிலும் கிட்னி திருட்டு மோசடி தற்போது விரிந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் கிட்னி திருட்டு

தமிழகத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிட்னி திருட்டு மோசடி தற்போது புதுச்சேரிக்கும் விரிந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏழை மக்களின் வறுமையை நன்கு பயன்படுத்தி, அவர்களிடம் குறைந்த தொகையை கொடுத்து கிட்னியை பெற்றுக் கொண்டு, பலமடங்கு லாபத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பணம் சம்பாதித்து வரும் கும்பல் தற்போது புதுச்சேரியிலும் தங்கள் 'கைவரிசையை' காட்டி வருகிறது.

தமிழகத்தில் தொடங்கிய மோசடி – புதுச்சேரிக்கும் பரவல்

தமிழகத்தின் நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கடந்த மாதங்களில் கிட்னி மோசடி சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை மக்கள் குறிக்கோளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கும்பலுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்களுடன் தொடர்புகள் இருப்பதாகவும், சில அரசியல்வாதிகளும் பின்னணி சக்தியாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த பரபரப்புக்கு பிறகு, சில முக்கிய மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய முக்கிய மருத்துவர்கள் இருவர் தற்போது தங்களது தொழிலை புதுச்சேரிக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் கைவரிசை – ஒரே நாளில் 4 கிட்னி மாற்றம்

புதுச்சேரி புறநகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. சிகிச்சைக்காக வருபவர்கள் மற்றும் கிட்னி தானம் தருபவர்கள் குறித்து புலனாய்வு செய்யும்போது, பலர் உறவினர் அல்லாதவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கும்பல், போலி ஆவணங்களை தயார் செய்து, கிட்னி பெறுபவருக்கும் கொடுப்பவருக்கும் உறவினர் என நிரூபிக்கிறது. சோட்டோ (State Organ and Tissue Transplant Organisation) அமைப்பின் அனுமதியின்றியே அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த தொகை கொடுத்து கோடிக்கணக்கில் லாபம்

தங்களுடைய கிட்னியை தானம் கொடுக்க விரும்பும் ஏழை மக்களுக்கு, ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கொடுத்து, அவற்றை நோயாளிகளிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்கும் இந்த மோசடி கும்பல், கடந்த மாதம் மட்டும் 10 கிட்னி மாற்றங்களை நடத்தியுள்ளது. இது பெரிய அளவிலான மருத்துவ மோசடியை உணர்த்துகிறது.

அதிகாரிகள் முன்வைக்கும் வேதனை

"புகார் எதுவும் வரவில்லை என்பதால், தாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை," என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் புதுச்சேரியை போல சின்ன மாநிலங்களை தங்கள் மையமாக பயன்படுத்தி, கண்காணிப்பிற்கு எளிதாகக் கிடைக்காத சூழலில் செயல்படுவதை இது தெளிவாகக் காட்டுகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகுந்த பொறுப்புடனும், சட்டப்படி மட்டுமே நடைபெற வேண்டிய செயலாகும். ஆனால், சில மருத்தவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மோசடி கும்பல்களின் கூட்டு முயற்சியால், ஏழை மக்கள் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த வகை மோசடிகள் மக்களின் நம்பிக்கையை தகர்க்கின்றன. அதனால், இது தொடர்பாக கடும் விசாரணையும், சட்ட நடவடிக்கையும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
TN Rain Alert: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Govt pongal gift | பொங்கல் பரிசு ரூ.5000 மக்களுக்கு HAPPY NEWS! தமிழக அரசு திட்டம்?
”வர முடியுமா? முடியாதா?” விடாமல் துரத்தும் அமித்ஷா! விஜய்க்கு காத்திருக்கும் ஆப்பு
Bihar Exit Poll 2025 | ’’அரியணை பாஜகவுக்கு தான்! ஆனால் CM யாரு தெரியுமா?’’ EXIT POLL MEGA TWIST
CM இருக்கையில் தேஜஸ்வி? பாஜக கூட்டணிக்கு சிக்கல்.. பீகார் வரலாறு சுவாரஸ்யம் | Bihar Election 2025
Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
மேகதாது அணை கட்ட அனுமதியா.? என்ன சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
TN Rain Alert: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை: 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னை மக்களே.! நவம்பர் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.?
நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Pongal Gift: பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
Ops: அடுத்தடுத்து 4 வீடுகள் மாறிய ஓபிஎஸ்.! இதுதான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
அடுத்தடுத்து 4 வீடுகள் மாறிய ஓபிஎஸ்.! இதுதான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
Embed widget