மேலும் அறிய

மின்சாரத்தை துண்டித்த மின் துறை ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள் - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்த மின் துறை ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்-அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்த மின் துறை ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் 24 மத்திய அரசு பவர் கிரிட்  நிறுவன ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க இரண்டு கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கலளை கண்டித்து ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே மின் துண்டிப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக புதுச்சேரி போராட்டக் களமாக மாறி உள்ளது. இந்த நிலையில் இன்று புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பிராந்திகளிலும் மாலை முதல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மாநிலம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் புதுச்சேரி மாநிலமே இருளில் மூழ்கியது. இதனை கண்டித்து பொதுமக்களும் போராட்டங்கள் நடத்தினர். புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.  இந்த நிலையில் இது குறித்து விவாதிக்க அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அறையில் நடைபெற்றது.  இதில் தலைமை செயலர் ராஜு வர்மா, டி.ஜி.பி மனோஜ் குமார் லால், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இதற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம்...

மின்துறை ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால் அரசு கொள்கை முடிவாக எடுக்கப்பட்டு மின் துறை தனியார் மாயமாக அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.  ஆனால் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற ஊழியர்கள் இன்று பாகூர், வில்லியனூர், தொண்டமாநத்தம், உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததோடு பீஸ் கேரியர்களையும் கையோடு கொண்டு சென்று உள்ளார்கள் இது சம்பந்தமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மக்களுக்கு இடையூறு செய்தால் அரசு இதை வேடிக்கை பார்க்காது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் மின் நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி போலீசார் மின் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுவார்கள், அதே போன்று தொடர்ந்து மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு மத்திய அரசு பவர் கிரிட் நிறுவனத்தைச் சேர்ந்த 24 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள், அதேபோன்று மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்க இரண்டு துணை ராணுவ கம்பெனிகளும் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் போராட்டக் காரர்களுக்கு சமூக அமைப்புகளோ சட்டமன்ற உறுப்பினர்களோ ஆதரவு தரக்கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர் அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget