மேலும் அறிய

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நபர் மீது டிராக்டரை ஏற்றி படுகொலை

இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியானவரும், டிராக்டர் ஏற்றி ராமதாசை கொலை செய்தவரும் ஆன ஸ்ரீதர் விருத்தாசலம் நீதிமன்றில் சரண்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சக்திவிளாகம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள காளியம்மன் கோவில் அருகில் அதே கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சுமார் 10 மணியளவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தான் ஓட்டி வந்த டிராக்டரை ராமதாஸின் மேல் திடீரென ஏற்றினார், பின்னர் அங்கு இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் களைந்து அங்கு இருந்து தப்பித்து ஓடினர். இதனால் கிராமத்திற்குள் பதற்றம் ஏற்பட்டது. 
 
பின்னர் அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மற்றவர்கள் ஓடி சென்று, உடனடியாக கிராம மக்கள் ராமதாஸின் உடலை ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து இறந்த ராமதாசின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் டிராக்டரை ஏற்றி கொலை செய்த ஸ்ரீதர் டிராக்டருடன் தலைமறைவு ஆனார். 
 

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நபர் மீது டிராக்டரை ஏற்றி படுகொலை
 
இறந்த ராமதாசுக்கு சுசிலா என்ற மனைவியும் ஆதி என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். தற்போது சுசிலா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பின்னர் இந்த சம்பவம் குறித்து ஒரத்தூர் காவல் துறையினர் இடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொலைக்கான காரணம் குறித்து, மேலும் தலைமறைவான ஸ்ரீதரை தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீதர், மகாராஜன், பரமசிவம் எனும் மூன்று பேரின் மேல் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர்.
 

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நபர் மீது டிராக்டரை ஏற்றி படுகொலை
 
இதனிடையே இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியானவரும், டிராக்டர் ஏற்றி ராமதாசை கொலை செய்தவரும் ஆன ஸ்ரீதர் விருத்தாசலம் நீதிமன்றில் சரணடைந்தார். மேலும் அதே பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த மூன்றாவது குற்றவாளியான மகாராஜனை சுற்றி வளைத்து காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் தற்பொழுது தலைமறைவாக உள்ள இரண்டாவது குற்றவாளியான ஸ்ரீதரின் தந்தை பரமசிவத்தை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர், மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மிகக் கொடூரமான முறையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget