மேலும் அறிய

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நபர் மீது டிராக்டரை ஏற்றி படுகொலை

இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியானவரும், டிராக்டர் ஏற்றி ராமதாசை கொலை செய்தவரும் ஆன ஸ்ரீதர் விருத்தாசலம் நீதிமன்றில் சரண்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சக்திவிளாகம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள காளியம்மன் கோவில் அருகில் அதே கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சுமார் 10 மணியளவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தான் ஓட்டி வந்த டிராக்டரை ராமதாஸின் மேல் திடீரென ஏற்றினார், பின்னர் அங்கு இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் களைந்து அங்கு இருந்து தப்பித்து ஓடினர். இதனால் கிராமத்திற்குள் பதற்றம் ஏற்பட்டது. 
 
பின்னர் அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மற்றவர்கள் ஓடி சென்று, உடனடியாக கிராம மக்கள் ராமதாஸின் உடலை ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து இறந்த ராமதாசின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் டிராக்டரை ஏற்றி கொலை செய்த ஸ்ரீதர் டிராக்டருடன் தலைமறைவு ஆனார். 
 

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நபர் மீது டிராக்டரை ஏற்றி படுகொலை
 
இறந்த ராமதாசுக்கு சுசிலா என்ற மனைவியும் ஆதி என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். தற்போது சுசிலா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பின்னர் இந்த சம்பவம் குறித்து ஒரத்தூர் காவல் துறையினர் இடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொலைக்கான காரணம் குறித்து, மேலும் தலைமறைவான ஸ்ரீதரை தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீதர், மகாராஜன், பரமசிவம் எனும் மூன்று பேரின் மேல் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர்.
 

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நபர் மீது டிராக்டரை ஏற்றி படுகொலை
 
இதனிடையே இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியானவரும், டிராக்டர் ஏற்றி ராமதாசை கொலை செய்தவரும் ஆன ஸ்ரீதர் விருத்தாசலம் நீதிமன்றில் சரணடைந்தார். மேலும் அதே பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த மூன்றாவது குற்றவாளியான மகாராஜனை சுற்றி வளைத்து காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் தற்பொழுது தலைமறைவாக உள்ள இரண்டாவது குற்றவாளியான ஸ்ரீதரின் தந்தை பரமசிவத்தை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர், மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மிகக் கொடூரமான முறையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு , 36 மணி நேரம் மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு , 36 மணி நேரம் மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
PM Modi On Pakistan: பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு , 36 மணி நேரம் மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு , 36 மணி நேரம் மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
PM Modi On Pakistan: பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்த மோடி.! 46 நிமிடங்கள் விமானத்தில் இருந்தே விசிட்...
பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
பிரதமர் மோடியின் கேள்வியால் திணறிய ஏஐ தொழில்நுட்பம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
IND vs ENG: பவுலிங் பயங்கரம்! சுருண்டு போன பட்லர் பாய்ஸ்! பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா
IND vs ENG: பவுலிங் பயங்கரம்! சுருண்டு போன பட்லர் பாய்ஸ்! பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Arshdeep Singh: என் ஓவர்லயே அடிக்குறியா? அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்டை பழிவாங்கிய அர்ஷ்தீப்சிங்!
Arshdeep Singh: என் ஓவர்லயே அடிக்குறியா? அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்டை பழிவாங்கிய அர்ஷ்தீப்சிங்!
TVK slams seeman :
TVK slams seeman : "திரள்நிதி, கட்டுத்தொகை, உளறல்.." சீமானை கிழித்து தொங்கவிட்ட தவெக
Embed widget