மேலும் அறிய

கோயிலில் பெண்ணை சாதி பெயரை கொண்டு திட்டிய விவகாரம் - வழக்கை வாபஸ் பெற மிரட்டல்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை சாதி பெயரை கொண்டு திட்டிய விவகாரம்- வழக்கை வாபஸ் பெற சொல்லி மிரட்டிய காவல்துறையினர்!

கடலூர் மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு தரப்பு தீட்சிதர்கள் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் தர்ஷன் என்ற தீட்சிதர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபையின் மீது அழைத்துச் சென்றபோது மற்ற தீட்சிதர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின்‌ கீழ் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சாதி தீண்டாமையை தீட்சிதர்கள் கடைப்பிடித்ததாகவும்,  மேலும் இங்கு இருக்கு வேறொரு தீட்சதர்‌ உதவியுடன் கனக சபை மீது ஏற முற்பட்டபோது, என்னை சாதி பெயரை குறிப்பிட்டு திட்டினர். தவறாக பேசினர் என்று புகாரில் ஜெயஷீலா குறிப்பிட்டுள்ளார்.
 

கோயிலில் பெண்ணை சாதி பெயரை கொண்டு திட்டிய விவகாரம் - வழக்கை வாபஸ் பெற மிரட்டல்
 
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக சில பிரச்னைகள் நீடித்து கொண்டு இருப்பதால் அதனையொட்டி இந்த விசாரணை செய்யப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெய ஷீலா பொய் கூறுவதாகவும், தீட்சிதர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார். கடந்த 7 மாதங்களுக்கு மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நகர் காவல் துறையினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு எனது வீட்டிற்கு வந்து இந்த வழக்கில் பொய் உரைத்துள்ளதாகவும், தவறாக புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினர். அதற்கு என்னை கையெழுத்திட காவல் துறையினர் வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்திட மறுத்துவிட்டேன். இந்த சம்பவம் அனைத்தும் உண்மை, இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் உள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு மாதங்களுக்கு மேலாக நான் தொடர்ந்து போராடினேன் மீண்டும் மீண்டும் கையொழுத்து போட போலீசார் வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்திடவில்லை என புகார் அளித்த ஜெயஷீலா தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மூலமாக வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அதனையும் சிறிது நேரம் கழித்து விலக்கிவிட்டனர் என்கிறார் ஜெய ஷீலா.
 
மேலும், இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் தலையிட்டு இதில் உண்மை தன்மையை வெளிகொண்டு வர‌ உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
 

கோயிலில் பெண்ணை சாதி பெயரை கொண்டு திட்டிய விவகாரம் - வழக்கை வாபஸ் பெற மிரட்டல்
 
இந்த வழக்கை இரண்டு மாதத்தில் முடிக்கும் படி சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் ஜூலை 29ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர்  மருத்துவ விடுப்பில் இருப்பதால் இந்த வழக்கில் முறையான நடைமுறைகள் சிலவற்றை பின்பற்றாமல் அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக தவறாக கையாண்டுள்ளார். இந்த விவகாரத்தில்  என எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.மேலும் புதிதாக விசாரணை அதிகாரியை நியமித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என்றும்  தெரிவித்துள்ளார்.
 
கனக சபை மேலே ஏறி சாமி தரிசனம் செய்த விவகாரம் தொடர்பாக பெண்பக்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 20 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது தவறான புகார் என்று கூறி பெண்ணின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் கடலூர் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு விசாரணை அதிகாரியை மாற்றிய சம்பவங்கள் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Embed widget