மேலும் அறிய

Minister ponmudi: சூழ்ச்சி செய்யும் பாஜக; கொந்தளிக்கும் அமைச்சர் பொன்முடி ... என்ன செய்ய வேண்டும் ?

மும்மொழி கொள்கை வேண்டாம், இருமொழி கொள்கைதான் வேண்டும் என்பது மக்களுக்கு எடுத்து கூறி புரிய வைக்க வேண்டும்.

விழுப்புரம்: ஒன்றிய அரசு பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தமிழகத்தில் நுழைய ஏதேனும் வழி இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது என விழுப்புரத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
 
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் விழுப்புரம் மற்றும் வானூர் தொகுதிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் வனத்துறை அமைச்சர் பொன்முடி: 
 
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கக் கூடாது என போராடியவர்கள் பல பேர். இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டார். இருமொழி கொள்கை குறித்து கிராமங்களில் எடுத்துக் கூற வேண்டும். இதனை செய்தாலே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிடுவார்கள் டெபாசிட் இழப்பார்கள் என்பது நிச்சயம். ஏழு தொகுதியில் வெற்றி பெற்று வெற்றியை ஸ்டாலின் கையில் ஒப்படைக்க வேண்டும்.
 
சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். திமுக இயக்கத்தின் கொள்கைகளை புரிய வைக்க வேண்டும். இப்போதிலிருந்து அந்தப் பணியை துவக்கிட வேண்டும். மும்மொழி கொள்கை வேண்டாம், இருமொழி கொள்கைதான் வேண்டும் என்பது மக்களுக்கு எடுத்து கூறி புரிய வைக்க வேண்டும். ஒன்றிய அரசு பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தமிழகத்தில் நுழைய ஏதேனும் வழி இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.
 
நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம் அதனையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு 2026 தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். ஒன்றிய அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இதனால் கல்விக்கு நிதி கொடுக்காமல் இருக்கிறார்கள் ஆனால் முதல்வர் ஸ்டாலின் பத்தாயிரம் கொடிய நிறுத்தினாலும் நாங்கள் இருமொழி கொள்கையை கைவிடமாட்டோம் என கூறியுள்ளார். எனவே முதல்வர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்பு செய்திகள்

Villupuram power cut: விழுப்புரத்தில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Villupuram power cut: விழுப்புரத்தில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! ஜிப்மரில் தொடங்கும் ஒரு மாத கால பிரம்மாண்ட பதிவு முகாம்!
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! ஜிப்மரில் தொடங்கும் ஒரு மாத கால பிரம்மாண்ட பதிவு முகாம்!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
படித்தும் வேலையில்லையா? தமிழக அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் உள்ளே!
படித்தும் வேலையில்லையா? தமிழக அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் உள்ளே!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget