மேலும் அறிய

வீடூரில் 2000 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு: தொன்மை நாகரிகத்தின் சான்று!

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் பண்பாட்டு, கல்வி மற்றும் நாகரிகத்திற்குரிய முக்கிய இடமாக இருந்ததற்கான தொன்மை சான்றாகக் கருதப்படுகிறது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூரில் 2000 ஆண்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்பரப்பு ஆய்வில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அந்த பகுதி ஒரு பண்பாட்டு, கல்வி மற்றும் நாகரிகத்திற்குரிய முக்கிய இடமாக இருந்ததற்கான தொன்மை சான்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆய்வில் சென்னை ராமகிருஷ்ணா விவேகானந்தா மிஷன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அரங்க. மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்று ஆய்வாளர் முனைவர் நா. ஜெயப்பிரதா மாயகிருஷ்ணன் மற்றும் பொருளாதாரத் துறை விரிவுரையாளர் முனைவர் பா. ஹரிகரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

கண்டெடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

இரண்டு பானை ஓடுகளில் "நோறா I" மற்றும் "பசி" என்ற தமிழ் சொற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு பானை ஓட்டில் தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகளும் காணப்படுகின்றன.

தமிழ் பிராமி எழுத்துக்கள், அசோக பிராமி, தென்பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்து முறைகளில் இருந்து வேறுபட்டதல்லாமல், அதற்கு முந்தைய முறையாகவும் கருதப்படுகிறது. இத்தகைய எழுத்துக்கள் பழங்காலத்தில் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், நாணயங்கள், மோதிரங்கள், முத்திரை அச்சுகள் போன்றவற்றிலும் காணப்பட்டுள்ளன.

இந்த எழுத்துக்கள் இந்தியாவிலும் (தமிழகம், கேரளம்), வெளிநாடுகளிலும் (ஓமன், எகிப்து, இலங்கை, தாய்லாந்து) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், முத்துப்பட்டி, சென்னிமலை, திருப்பரங்குன்றம், தர்மநல்லூர் போன்ற இடங்களில் இதுபோன்ற எழுத்துக்கள் முன்னர் கண்டறியப்பட்டுள்ளன.

வீடூர் – ஒரு தொன்மை நாகரிகத்தின் சான்று:

வீடூரில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள், அந்த ஊர் பழங்காலத்தில் கல்வி அறிவு மற்றும் எழுத்து பயன்பாட்டில் சிறந்து விளங்கிய ஒரு நாகரிக மையமாக இருந்ததற்கு வலியுறுத்தும் அரிய ஆதாரமாகும். சாமானிய பானைகளில் கூட இவ்வகை எழுத்துக்கள் காணப்படுவது, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் கல்வி நிலையை எடுத்துரைக்கிறது.

இந்த முக்கியமான தொல்லியல் கண்டெடுப்புகள், தமிழின் தொன்மையும் நாகரிக வளர்ச்சியையும் புதிய கோணத்தில் புனைவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்

தமிழ்ப் பிராமி (Tamil Brahmi), அல்லது தமிழி, என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தமிழி எழுத்துக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன.

தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டதும்), 1947க்கு பிறகு இந்திய துணைக்கண்டத்தில் பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றிலும், மற்ற நாடுகளான இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழி என்பது தாமிழி என்றும் அழைக்கப்பட்டது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக தமிழி (அல்லது தாமிழி) மற்றும் வட்டெழுத்து ஆகிய இரண்டும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget