மேலும் அறிய

வீடூரில் 2000 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு: தொன்மை நாகரிகத்தின் சான்று!

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் பண்பாட்டு, கல்வி மற்றும் நாகரிகத்திற்குரிய முக்கிய இடமாக இருந்ததற்கான தொன்மை சான்றாகக் கருதப்படுகிறது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூரில் 2000 ஆண்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்பரப்பு ஆய்வில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அந்த பகுதி ஒரு பண்பாட்டு, கல்வி மற்றும் நாகரிகத்திற்குரிய முக்கிய இடமாக இருந்ததற்கான தொன்மை சான்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆய்வில் சென்னை ராமகிருஷ்ணா விவேகானந்தா மிஷன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அரங்க. மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்று ஆய்வாளர் முனைவர் நா. ஜெயப்பிரதா மாயகிருஷ்ணன் மற்றும் பொருளாதாரத் துறை விரிவுரையாளர் முனைவர் பா. ஹரிகரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

கண்டெடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

இரண்டு பானை ஓடுகளில் "நோறா I" மற்றும் "பசி" என்ற தமிழ் சொற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு பானை ஓட்டில் தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகளும் காணப்படுகின்றன.

தமிழ் பிராமி எழுத்துக்கள், அசோக பிராமி, தென்பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்து முறைகளில் இருந்து வேறுபட்டதல்லாமல், அதற்கு முந்தைய முறையாகவும் கருதப்படுகிறது. இத்தகைய எழுத்துக்கள் பழங்காலத்தில் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், நாணயங்கள், மோதிரங்கள், முத்திரை அச்சுகள் போன்றவற்றிலும் காணப்பட்டுள்ளன.

இந்த எழுத்துக்கள் இந்தியாவிலும் (தமிழகம், கேரளம்), வெளிநாடுகளிலும் (ஓமன், எகிப்து, இலங்கை, தாய்லாந்து) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், முத்துப்பட்டி, சென்னிமலை, திருப்பரங்குன்றம், தர்மநல்லூர் போன்ற இடங்களில் இதுபோன்ற எழுத்துக்கள் முன்னர் கண்டறியப்பட்டுள்ளன.

வீடூர் – ஒரு தொன்மை நாகரிகத்தின் சான்று:

வீடூரில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள், அந்த ஊர் பழங்காலத்தில் கல்வி அறிவு மற்றும் எழுத்து பயன்பாட்டில் சிறந்து விளங்கிய ஒரு நாகரிக மையமாக இருந்ததற்கு வலியுறுத்தும் அரிய ஆதாரமாகும். சாமானிய பானைகளில் கூட இவ்வகை எழுத்துக்கள் காணப்படுவது, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் கல்வி நிலையை எடுத்துரைக்கிறது.

இந்த முக்கியமான தொல்லியல் கண்டெடுப்புகள், தமிழின் தொன்மையும் நாகரிக வளர்ச்சியையும் புதிய கோணத்தில் புனைவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்

தமிழ்ப் பிராமி (Tamil Brahmi), அல்லது தமிழி, என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தமிழி எழுத்துக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன.

தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டதும்), 1947க்கு பிறகு இந்திய துணைக்கண்டத்தில் பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றிலும், மற்ற நாடுகளான இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழி என்பது தாமிழி என்றும் அழைக்கப்பட்டது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக தமிழி (அல்லது தாமிழி) மற்றும் வட்டெழுத்து ஆகிய இரண்டும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

2027-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
2027-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
ஆந்திரா To விழுப்புரம்: ரயில் மூலம் கஞ்சா கடத்திய 'குருவி' சிக்கியது எப்படி?
ஆந்திரா To விழுப்புரம்: ரயில் மூலம் கஞ்சா கடத்திய 'குருவி' சிக்கியது எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
MK Stalin: ”நாங்க தான் மெஜாரிட்டி” கூடுதல் நேரம் ஒதுக்கனும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
”நாங்க தான் மெஜாரிட்டி” கூடுதல் நேரம் ஒதுக்கனும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
TN Assembly: ”கசப்பான விஷயம் நடந்துச்சு” பேரவையில் CM விஜய்க்கு சூசகமாக மெசேஜ் சொன்ன அமமுக MLA - வீடியோ
”கசப்பான விஷயம் நடந்துச்சு” பேரவையில் CM விஜய்க்கு சூசகமாக மெசேஜ் சொன்ன அமமுக MLA - வீடியோ
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!
ADMK support TVK : தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
CM Vijay: 2 வாரம் தான் டைம்... 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!
TVK MLA COURT CASE: விஜய்க்கு ஷாக்.! தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.! நீதிமன்றம் அதிரடி
விஜய்க்கு ஷாக்.! தவெக எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.! நீதிமன்றம் அதிரடி
CM Vijay: ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
ADMK-வின் 30 MLA-க்கள் ஆதரவு..! CM விஜய் ஏற்பாரா? தவெகவின் நிலையான ஆட்சி? முரண்பாடான கூட்டணி?
Embed widget