மேலும் அறிய

வீடூரில் 2000 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு: தொன்மை நாகரிகத்தின் சான்று!

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் பண்பாட்டு, கல்வி மற்றும் நாகரிகத்திற்குரிய முக்கிய இடமாக இருந்ததற்கான தொன்மை சான்றாகக் கருதப்படுகிறது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூரில் 2000 ஆண்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்பரப்பு ஆய்வில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அந்த பகுதி ஒரு பண்பாட்டு, கல்வி மற்றும் நாகரிகத்திற்குரிய முக்கிய இடமாக இருந்ததற்கான தொன்மை சான்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆய்வில் சென்னை ராமகிருஷ்ணா விவேகானந்தா மிஷன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அரங்க. மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்று ஆய்வாளர் முனைவர் நா. ஜெயப்பிரதா மாயகிருஷ்ணன் மற்றும் பொருளாதாரத் துறை விரிவுரையாளர் முனைவர் பா. ஹரிகரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

கண்டெடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

இரண்டு பானை ஓடுகளில் "நோறா I" மற்றும் "பசி" என்ற தமிழ் சொற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு பானை ஓட்டில் தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகளும் காணப்படுகின்றன.

தமிழ் பிராமி எழுத்துக்கள், அசோக பிராமி, தென்பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்து முறைகளில் இருந்து வேறுபட்டதல்லாமல், அதற்கு முந்தைய முறையாகவும் கருதப்படுகிறது. இத்தகைய எழுத்துக்கள் பழங்காலத்தில் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், நாணயங்கள், மோதிரங்கள், முத்திரை அச்சுகள் போன்றவற்றிலும் காணப்பட்டுள்ளன.

இந்த எழுத்துக்கள் இந்தியாவிலும் (தமிழகம், கேரளம்), வெளிநாடுகளிலும் (ஓமன், எகிப்து, இலங்கை, தாய்லாந்து) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், முத்துப்பட்டி, சென்னிமலை, திருப்பரங்குன்றம், தர்மநல்லூர் போன்ற இடங்களில் இதுபோன்ற எழுத்துக்கள் முன்னர் கண்டறியப்பட்டுள்ளன.

வீடூர் – ஒரு தொன்மை நாகரிகத்தின் சான்று:

வீடூரில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள், அந்த ஊர் பழங்காலத்தில் கல்வி அறிவு மற்றும் எழுத்து பயன்பாட்டில் சிறந்து விளங்கிய ஒரு நாகரிக மையமாக இருந்ததற்கு வலியுறுத்தும் அரிய ஆதாரமாகும். சாமானிய பானைகளில் கூட இவ்வகை எழுத்துக்கள் காணப்படுவது, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் கல்வி நிலையை எடுத்துரைக்கிறது.

இந்த முக்கியமான தொல்லியல் கண்டெடுப்புகள், தமிழின் தொன்மையும் நாகரிக வளர்ச்சியையும் புதிய கோணத்தில் புனைவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்

தமிழ்ப் பிராமி (Tamil Brahmi), அல்லது தமிழி, என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தமிழி எழுத்துக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன.

தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டதும்), 1947க்கு பிறகு இந்திய துணைக்கண்டத்தில் பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றிலும், மற்ற நாடுகளான இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழி என்பது தாமிழி என்றும் அழைக்கப்பட்டது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக தமிழி (அல்லது தாமிழி) மற்றும் வட்டெழுத்து ஆகிய இரண்டும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
புதுச்சேரி பயங்கரம்: காதலை மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
​தேர்தல் 2026: விழுப்புரத்தில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போட்ட ‘செக்’
தேர்தல் 2026: விழுப்புரத்தில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போட்ட ‘செக்’...
தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!
தேர்வர்கள் கவனத்திற்கு! 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி இல்லை: டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான அதிரடி உத்தரவு!
மரண பிடியில் இருந்து தப்பிய தொழிலாளர்கள்! லாரி மோதி கூரை வீட்டுக்குள் புகுந்த லோடு வேன் - தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்ட கோர விபத்து!
மரண பிடியில் இருந்து தப்பிய தொழிலாளர்கள்! லாரி மோதி கூரை வீட்டுக்குள் புகுந்த லோடு வேன் - தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்ட கோர விபத்து!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Tomato And Onion Price : போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
போட்டி போட்டு குறையும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Railway announcement : திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Embed widget