மேலும் அறிய

பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2025

(Source:  Poll of Polls)

வீடூரில் 2000 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு: தொன்மை நாகரிகத்தின் சான்று!

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் பண்பாட்டு, கல்வி மற்றும் நாகரிகத்திற்குரிய முக்கிய இடமாக இருந்ததற்கான தொன்மை சான்றாகக் கருதப்படுகிறது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூரில் 2000 ஆண்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் வீடூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்பரப்பு ஆய்வில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அந்த பகுதி ஒரு பண்பாட்டு, கல்வி மற்றும் நாகரிகத்திற்குரிய முக்கிய இடமாக இருந்ததற்கான தொன்மை சான்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஆய்வில் சென்னை ராமகிருஷ்ணா விவேகானந்தா மிஷன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அரங்க. மாயகிருஷ்ணன், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்று ஆய்வாளர் முனைவர் நா. ஜெயப்பிரதா மாயகிருஷ்ணன் மற்றும் பொருளாதாரத் துறை விரிவுரையாளர் முனைவர் பா. ஹரிகரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

கண்டெடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

இரண்டு பானை ஓடுகளில் "நோறா I" மற்றும் "பசி" என்ற தமிழ் சொற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு பானை ஓட்டில் தொன்மை காலத்தில் பயன்பாட்டில் இருந்த குறியீடுகளும் காணப்படுகின்றன.

தமிழ் பிராமி எழுத்துக்கள், அசோக பிராமி, தென்பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்து முறைகளில் இருந்து வேறுபட்டதல்லாமல், அதற்கு முந்தைய முறையாகவும் கருதப்படுகிறது. இத்தகைய எழுத்துக்கள் பழங்காலத்தில் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், நாணயங்கள், மோதிரங்கள், முத்திரை அச்சுகள் போன்றவற்றிலும் காணப்பட்டுள்ளன.

இந்த எழுத்துக்கள் இந்தியாவிலும் (தமிழகம், கேரளம்), வெளிநாடுகளிலும் (ஓமன், எகிப்து, இலங்கை, தாய்லாந்து) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், முத்துப்பட்டி, சென்னிமலை, திருப்பரங்குன்றம், தர்மநல்லூர் போன்ற இடங்களில் இதுபோன்ற எழுத்துக்கள் முன்னர் கண்டறியப்பட்டுள்ளன.

வீடூர் – ஒரு தொன்மை நாகரிகத்தின் சான்று:

வீடூரில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள், அந்த ஊர் பழங்காலத்தில் கல்வி அறிவு மற்றும் எழுத்து பயன்பாட்டில் சிறந்து விளங்கிய ஒரு நாகரிக மையமாக இருந்ததற்கு வலியுறுத்தும் அரிய ஆதாரமாகும். சாமானிய பானைகளில் கூட இவ்வகை எழுத்துக்கள் காணப்படுவது, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களின் கல்வி நிலையை எடுத்துரைக்கிறது.

இந்த முக்கியமான தொல்லியல் கண்டெடுப்புகள், தமிழின் தொன்மையும் நாகரிக வளர்ச்சியையும் புதிய கோணத்தில் புனைவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்

தமிழ்ப் பிராமி (Tamil Brahmi), அல்லது தமிழி, என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தமிழி எழுத்துக்கள் கண்டு அறியப்பட்டுள்ளன.

தற்போதைய தென் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள (தமிழகம் என முன்பு அறியப்பட்டதும்), 1947க்கு பிறகு இந்திய துணைக்கண்டத்தில் பிரிக்கப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றிலும், மற்ற நாடுகளான இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழி என்பது தாமிழி என்றும் அழைக்கப்பட்டது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக தமிழி (அல்லது தாமிழி) மற்றும் வட்டெழுத்து ஆகிய இரண்டும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
2026 Govt. Holidays: மக்களே நோட் பண்ணிக்கோங்க.. 2026-ல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா.? ஜாலிதான் போங்க.!
மக்களே நோட் பண்ணிக்கோங்க.. 2026-ல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா.? ஜாலிதான் போங்க.!
ISRO Gaganyaan: ககன்யான் திட்டம்; ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி; அசத்திய இஸ்ரோ
ககன்யான் திட்டம்; ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி; அசத்திய இஸ்ரோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் தேஜஸ்வி, ராகுல் வெளியான EXIT POLL | Bihar Exit Poll 2025
குடும்பத்தை பிரித்த ஆதவ் தூக்கி எறிந்த திமுக, விசிக விஜய்யை எச்சரிக்கும் சார்லஸ் | Charles Martin on Aadhav Arjuna
வெடித்து சிதறிய சிலிண்டர்கள் தீக்கிரையான டிப்பர் லாரி பரபரக்கும் அரியலூர் பகீர் வீடியோ | Ariyalur Gas Cylinder Lorry Blast
Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?
Delhi Car Blast CCTV | டெல்லி கார் குண்டு வெடிப்புபின்னணியில் காஷ்மீர் மருத்துவர்?சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
2026 Govt. Holidays: மக்களே நோட் பண்ணிக்கோங்க.. 2026-ல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா.? ஜாலிதான் போங்க.!
மக்களே நோட் பண்ணிக்கோங்க.. 2026-ல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா.? ஜாலிதான் போங்க.!
ISRO Gaganyaan: ககன்யான் திட்டம்; ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி; அசத்திய இஸ்ரோ
ககன்யான் திட்டம்; ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி; அசத்திய இஸ்ரோ
Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
TASMAC Vs Consumer Court: டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா; ஊழியருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்; இனியாவது திருந்துவார்களா.?!
டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா; ஊழியருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்; இனியாவது திருந்துவார்களா.?!
குடும்பத்தையே பிரித்த ஆதவ் அர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் அர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
Embed widget