டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க
ஏலகிரி கோடை விழாவில் மலர்கள் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறாததால் ஏமாற்றத்துடன் புலம்பியபடி வீடு திரும்பிய சுற்றுலா பயணிகள்.

திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் நடைபெற்ற கோடை விழாவில் மலர்கள் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் புலம்பியபடி வீடு திரும்பினார்கள்.
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை அமைந்துள்ளது. இந்த ஏலகிரி மலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றன.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கோடை விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்வார்கள். மேலும், கோடை விழாவின்போது மலர்கள் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் கோடை விழா நடைபெறாத காரணத்தால் இன்று மற்றும் நாளை கோடை விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற கோடை விழாவில் மலர் கண்காட்சி மற்றும் மலைகளில் விளையாடக்கூடிய பல்வேறு வகையான பழங்களின் கண்காட்சி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறாததால் கோடை விழாவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், இந்த ஆண்டு கோடைவிழா போல் இல்லை என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் புலம்பியபடி ஏமாற்றத்துடன் வீடு திரும்பி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















