மேலும் அறிய

தருமபுரி: தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் ரத்து: மாற்று பணி வழங்க பணியாளர்கள் கோரிக்கை மனு!

படித்த மாணவர்கள் தற்பொழுது மருத்துவம், பொறியியல், காவல்துறை, வழக்கறிஞர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை ரத்து செய்தததால், மாற்று பணி வழங்க வலியுறுத்தி, 25 ஆண்டுகள் பணியாற்றிய, பணியாளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 1996 ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரை மீட்டு பயிற்சி கொடுத்து அவர்கள் முறை சார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக கீழ் எழுத்தர், ஆவண காப்பாளர், கல்வி பயிற்றுனர், தொழில்கல்வி பயிற்றுநர், மைய உதவியாளர்கள் என 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் 17,126 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, கல்வி மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டு இதில் 12846 சிறார்கள் முறைசார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி: தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் ரத்து: மாற்று பணி வழங்க பணியாளர்கள் கோரிக்கை மனு!

இவ்வாறு படித்த மாணவர்கள் தற்பொழுது மருத்துவம், பொறியியல், காவல் துறை, வழக்கறிஞர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசு தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை நிறுத்தியது. அதனை தற்போது சர்வ சிக்ச அபியான் திட்டத்துடன் இணைத்துள்ளது. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றி வந்த பணியாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் இந்தத் திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால் இவர்களது கோரிக்கைக்கு, அரசு இன்று வரை செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கல்வி அனுபவம் உள்ளதால், எஸ்எஸ்ஏ திட்டத்தினல் பணி வழங்கிட வேண்டும் அல்லது சத்துணவு திட்டத்தில் பணி அனுபவம் உள்ளதால் சத்துணவு திட்டத்தில் பணி வழங்கிட வேண்டும் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் பணி அனுபவம் உள்ளதால் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பணி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரிகம் மனு கொடுத்தனர். மேலும் கடந்த 25 ஆண்டுகளாக இந்த திட்டத்தில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதால், இதில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வயது மூப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு தமிழக அரசு மாற்று பணி வழங்கியோ அல்லது வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget