மேலும் அறிய

ஆந்திர எல்லையை தாண்டி கொட்டும் பாலாற்று வெள்ளம் - துள்ளிகுதிக்கும் மீன்களை அள்ளிச்செல்லும் மக்கள்

திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

தமிழகம் மட்டும் இன்றி தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநில ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மற்றும் ஆந்திராவை நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட பாலாற்றில் தற்போது சுமார் 1000 கனஅடிக்கு மேல் வெள்ளம் வந்துகொண்டுள்ளது. தமிழகத்தில் ஆந்திர எல்லையான புல்லூர் பகுதியில் பாலாறு அடி எடுத்து வைக்கிறது. பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்க பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் புல்லூர் பகுதியில் வரும் வெள்ள நீரில் அதிக அளவு மீன்கள் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி ஆர்வமிகுதியின் காரணமாக மக்கள் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர். சிலர் மீன்பிடி வலையை பயன்படுத்தியும், சிலர் தூண்டில், லுங்கி போன்றவற்றை பயன்படுத்தியும் ஆற்றில் வரும் மீன்களை பிடித்து எடுத்து செல்கின்றனர். ஆற்றில் அடித்து வரும் மீன்கள் சுமார் 1 கிலோ வரை உள்ளதால் மக்கள் இன்னும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தாங்கள் பிடிக்கும் மீன்களுடன் செல்பி போட்டோ எடுத்து மகிழ்ந்து அதை சமுக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். 
 

ஆந்திர எல்லையை தாண்டி கொட்டும் பாலாற்று வெள்ளம் - துள்ளிகுதிக்கும் மீன்களை அள்ளிச்செல்லும் மக்கள்
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தமிழக ஆந்திரா எல்லைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா மாநில பகுதியில் இருக்கக்கூடிய 22 தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி தற்பொழுது தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் ஆந்திர அரசு கட்டியுள்ள கடைசி அணையான புல்லூர் தடுப்பணை நிரம்பி அதனுடைய உபரி நீரானது 1000 கனஅடி வீதம் தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது.
 

ஆந்திர எல்லையை தாண்டி கொட்டும் பாலாற்று வெள்ளம் - துள்ளிகுதிக்கும் மீன்களை அள்ளிச்செல்லும் மக்கள்
 
 
இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரானது திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 285 ஏரிகள் மற்றும் 269 குளம், குட்டைகள் உள்ளது. இதில் 24 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 45 ஏரிகள் 75% தண்ணீர் நிரம்பி வருகிறது. மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49  ஏரிகள் உள்ளது. இதில் 18 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 
இதில் 4 ஏரிகளில் 75% நீர் நிரம்பி உள்ளது மீதமுள்ள 27 ஏரிகளில் நீர் வரத்து தற்போது வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை காரணமாக தமிழக எல்லை பகுதியான வாணியம்பாடி அடுத்த புல்லூர் தடுப்பணையை தாண்டி பாலாற்றுக்கு தற்போது 1000 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாலாறு கரையோரம்  உள்ள பொது மக்கள் ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை திருப்பத்தூர் மாவட்ட சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக வாணியம்பாடியில் உள்ள தாழ்வான பகுதிகளில்  தேங்கியுள்ள மழை நீரை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Embed widget