மேலும் அறிய

திருவண்ணாமலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு...!

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே 4000 ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் எனும் ஊரிலுள்ள சிங்கமலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறைக் கீறல்கள் உள்ளது என உள்ளூர்வாசிகளான இரவிச்சந்திரன் மற்றும் சின்னதுரை ஆகியோர்  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்களான பாரதி ராஜா,  சீனுவாசன், பாலமுருகன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று  ஆய்வு செய்ததில் வரலாற்று சிறப்புமிக்க கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலையில் உள்ள குகையின் மேற்கு நோக்கிய பாறையில்  சுமார் 4 மீட்டர் உயரம், 7 மீட்டர் அகலத்தில் கற்செதுக்கு உருவங்கள் காணப்பட்டது . குகையின் தரைப்பகுதியில் உள்ள இரு சிறிய பாறைகளைப்பயன்படுத்தி உயரமான இடங்களில் உருவங்களை செதுக்கியுள்ளனர். குகை சுவற்றின் மேற்பகுதியில் திமிலுடன் கூடிய காளையும், அதன் வால்பகுதியின் அருகில் ஒரு மனிதனும் காணப்பட்டது.

 


திருவண்ணாமலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு...!

 

அதற்கு கீழ் வலப்பகுதியில் மற்றுமொரு திமிலுடன் கூடிய காளையும் அந்த காளையின் கழுத்துப் பகுதிக்கு கீழ் ஒரு மனிதனும், முகத்திற்கு முன்புறம் இரண்டு மனிதர்களும் செதுக்கப்பட்டு இருந்தது. இந்த காளையின் வால்பகுதி இறுதியில் ஒரு மனிதன் காணப்படுகிறார். இவர் இங்குள்ள மற்ற மனித உருவங்களைக் காட்டிலும் உடல்வாகு பெற்றவர் என்பதை விளக்க அவருடைய கைகளை வலிமையான வலிமையுடன் வரையப்பட்டு இருந்தது சிறப்பு வாய்ந்ததாகும். இவரின் கீழே இரண்டு விலங்குகளும், அதன் கீழ் பகுதியில் காட்டுப்பன்றி, மாடு போன்ற உருவம் பெரிய அளவில் காணப்பட்டது. இவ்விலங்கைச் சுற்றி 3 மான் அல்லது நாய் போன்ற விலங்குகள் வெவ்வேறு திசைகளில் காணப்பட்டது. பாறைச்சுவற்றின் இடப்புறம் திமிலுடன் கூடிய  இரு காளைகள் எதிரெதிர் திசைகளில் நின்று முகத்தோடு முகம் ஒட்டியவாறு பெரிய அளவில் காணப்பட்டது. இக்காளைகளின் கீழ்ப்பகுதியில் மூன்று கன்றுகள் அல்லது நாய்கள் போன்ற உருவங்கள் தென்பட்டது .

 


திருவண்ணாமலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு...!

அதனைத்தொடர்ந்து இரு மனிதர்கள் அருகருகே அமர்ந்துள்ளவாரும் செதுக்கப்பட்டுள்ளது. வலப்புறத்தில் ஒரு மனித உருவமும் காட்டப்பட்டது. இங்குள்ள இந்த செதுக்கு உருவத்தொகுதியில் சுமார் பத்து மனித உருவங்களும் பத்திற்கும் மேற்பட்ட விலங்குகளின் உருவங்களும் காணப்படுகிறது. இதை குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில்; “இந்த குகைக் சுவற்றில் கால்நடை சமூகம் சார்ந்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருவங்களில் திமிலுடைய மாடுகளும் அவற்றைச் சுற்றி கையில் எவ்வித ஆயுதங்களும் இன்றி மனிதர்களும் காணப்படுவதால் ஒருவேளை மாடுகளை பிடிப்பது போன்ற அணுகு முறையில் செதுக்கப்பட்டிருக்கலாம். வேட்டை சமூகம் கால்நடை சமூகமாக மாறும் போது வனத்திலுள்ள மாடுகளை பிடித்து பழக்கப்படுத்துவது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கற்செதுக்குகளும் அதுபோன்ற ஒரு நிகழ்வை நினைவு கூற உருவாக்கப்பட்டிருக்கலாம்.

 


திருவண்ணாமலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு...!

 

மேலும் இங்குள்ள மனிதர்கள் மாடுகளை பிடிப்பது போன்ற 'கை' பாவனையோடு காணப்படுவதால் இன்றைய ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்கு ஒத்தநிகழ்வாக இவற்றை கருதலாம். நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் மற்றும் மதுரை அருகேயுள்ள அணைக்கட்டி பாறை ஓவியங்களிலும் இங்குள்ளதை போலவே மாடுகளைப் பிடிக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இம்மலையின் தென்மேற்கு பகுதியிலுள்ள செத்தவரை அய்யனார் மலையிலுள்ள பாறை ஓவியங்களிலுள்ள காளைகளைப் போன்றே இங்கும் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சமாகும். இக்கற்செதுக்கு உருவங்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதுபோன்ற செதுக்கு உருவங்கள் வெகுசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளது, என்பதால் இந்த இடத்தை பாதுகாப்பதோடு, சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்களை பெறலாம்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Breaking News LIVE: மீண்டும் சவரனுக்கு ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!
Watch Annamalai BJP:  ”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
”மருத்துவ இடங்கள் மூலம் பணம் பார்த்த திமுக” : குற்றம்சாட்டிய அண்ணாமலை
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Crime: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை.. சேலத்தில் பெரும் பரபரப்பு.. நடந்தது என்ன?
Crime: அதிமுக பிரமுகர் வெட்டி கொலை.. சேலத்தில் பெரும் பரபரப்பு.. நடந்தது என்ன?
100 crore movies : இனிதான் ஆட்டமே இருக்கு! 2024ல் இதுவரையில் 100 கோடி அள்ளிய தமிழ் படங்கள் என்னென்ன?
இனிதான் ஆட்டமே இருக்கு! 2024ல் இதுவரையில் 100 கோடி அள்ளிய தமிழ் படங்கள் என்னென்ன?
ABP Impact: பனையங்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்த நெல்லை ஆட்சியர்.. மகிழ்ந்த மாணவ, மாணவியர்
பனையங்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்த நெல்லை ஆட்சியர்..
Embed widget