மேலும் அறிய

திருவண்ணாமலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு...!

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே 4000 ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் எனும் ஊரிலுள்ள சிங்கமலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறைக் கீறல்கள் உள்ளது என உள்ளூர்வாசிகளான இரவிச்சந்திரன் மற்றும் சின்னதுரை ஆகியோர்  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்களான பாரதி ராஜா,  சீனுவாசன், பாலமுருகன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று  ஆய்வு செய்ததில் வரலாற்று சிறப்புமிக்க கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலையில் உள்ள குகையின் மேற்கு நோக்கிய பாறையில்  சுமார் 4 மீட்டர் உயரம், 7 மீட்டர் அகலத்தில் கற்செதுக்கு உருவங்கள் காணப்பட்டது . குகையின் தரைப்பகுதியில் உள்ள இரு சிறிய பாறைகளைப்பயன்படுத்தி உயரமான இடங்களில் உருவங்களை செதுக்கியுள்ளனர். குகை சுவற்றின் மேற்பகுதியில் திமிலுடன் கூடிய காளையும், அதன் வால்பகுதியின் அருகில் ஒரு மனிதனும் காணப்பட்டது.

 


திருவண்ணாமலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு...!

 

அதற்கு கீழ் வலப்பகுதியில் மற்றுமொரு திமிலுடன் கூடிய காளையும் அந்த காளையின் கழுத்துப் பகுதிக்கு கீழ் ஒரு மனிதனும், முகத்திற்கு முன்புறம் இரண்டு மனிதர்களும் செதுக்கப்பட்டு இருந்தது. இந்த காளையின் வால்பகுதி இறுதியில் ஒரு மனிதன் காணப்படுகிறார். இவர் இங்குள்ள மற்ற மனித உருவங்களைக் காட்டிலும் உடல்வாகு பெற்றவர் என்பதை விளக்க அவருடைய கைகளை வலிமையான வலிமையுடன் வரையப்பட்டு இருந்தது சிறப்பு வாய்ந்ததாகும். இவரின் கீழே இரண்டு விலங்குகளும், அதன் கீழ் பகுதியில் காட்டுப்பன்றி, மாடு போன்ற உருவம் பெரிய அளவில் காணப்பட்டது. இவ்விலங்கைச் சுற்றி 3 மான் அல்லது நாய் போன்ற விலங்குகள் வெவ்வேறு திசைகளில் காணப்பட்டது. பாறைச்சுவற்றின் இடப்புறம் திமிலுடன் கூடிய  இரு காளைகள் எதிரெதிர் திசைகளில் நின்று முகத்தோடு முகம் ஒட்டியவாறு பெரிய அளவில் காணப்பட்டது. இக்காளைகளின் கீழ்ப்பகுதியில் மூன்று கன்றுகள் அல்லது நாய்கள் போன்ற உருவங்கள் தென்பட்டது .

 


திருவண்ணாமலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு...!

அதனைத்தொடர்ந்து இரு மனிதர்கள் அருகருகே அமர்ந்துள்ளவாரும் செதுக்கப்பட்டுள்ளது. வலப்புறத்தில் ஒரு மனித உருவமும் காட்டப்பட்டது. இங்குள்ள இந்த செதுக்கு உருவத்தொகுதியில் சுமார் பத்து மனித உருவங்களும் பத்திற்கும் மேற்பட்ட விலங்குகளின் உருவங்களும் காணப்படுகிறது. இதை குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில்; “இந்த குகைக் சுவற்றில் கால்நடை சமூகம் சார்ந்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருவங்களில் திமிலுடைய மாடுகளும் அவற்றைச் சுற்றி கையில் எவ்வித ஆயுதங்களும் இன்றி மனிதர்களும் காணப்படுவதால் ஒருவேளை மாடுகளை பிடிப்பது போன்ற அணுகு முறையில் செதுக்கப்பட்டிருக்கலாம். வேட்டை சமூகம் கால்நடை சமூகமாக மாறும் போது வனத்திலுள்ள மாடுகளை பிடித்து பழக்கப்படுத்துவது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கற்செதுக்குகளும் அதுபோன்ற ஒரு நிகழ்வை நினைவு கூற உருவாக்கப்பட்டிருக்கலாம்.

 


திருவண்ணாமலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு...!

 

மேலும் இங்குள்ள மனிதர்கள் மாடுகளை பிடிப்பது போன்ற 'கை' பாவனையோடு காணப்படுவதால் இன்றைய ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளுக்கு ஒத்தநிகழ்வாக இவற்றை கருதலாம். நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் மற்றும் மதுரை அருகேயுள்ள அணைக்கட்டி பாறை ஓவியங்களிலும் இங்குள்ளதை போலவே மாடுகளைப் பிடிக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இம்மலையின் தென்மேற்கு பகுதியிலுள்ள செத்தவரை அய்யனார் மலையிலுள்ள பாறை ஓவியங்களிலுள்ள காளைகளைப் போன்றே இங்கும் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சமாகும். இக்கற்செதுக்கு உருவங்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதுபோன்ற செதுக்கு உருவங்கள் வெகுசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளது, என்பதால் இந்த இடத்தை பாதுகாப்பதோடு, சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தால் மேலும் பல தகவல்களை பெறலாம்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்?  இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்? இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது" ஜெக்தீப் தன்கர் எங்கே? - 11 மணி செய்திகள்
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்?  இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்? இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Rohit Kohli: அவ்ளோதானா..! ODI போட்டிகளிலிருந்தும் கோலி, ரோகித் ஓய்வு? கடைசி தொடர் யாருடன்? உலக்கோப்பை-2027?
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது
Top 10 News Headlines: நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தர முடியாது" ஜெக்தீப் தன்கர் எங்கே? - 11 மணி செய்திகள்
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
Trump India: ட்ரம்பின் பொறாமையும், ஆசையும்.. படுத்தே விட்ட பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு நோ சொல்லும் இந்தியா
Tata Discount: 1.40 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. ஹுண்டாய்க்கு போட்டியாக ஆஃபர்களை அள்ளித்தெளித்த டாடா...!
Tata Discount: 1.40 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. ஹுண்டாய்க்கு போட்டியாக ஆஃபர்களை அள்ளித்தெளித்த டாடா...!
Tamilnadu Roundup: திருப்பூரில் முதலமைச்சர் ஆய்வு.. தென் தமிழகத்தில் தொடரும் மழை - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: திருப்பூரில் முதலமைச்சர் ஆய்வு.. தென் தமிழகத்தில் தொடரும் மழை - 10 மணி சம்பவங்கள்
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
Embed widget