மேலும் அறிய

அரசாங்க சாலைகள் அனைத்து சாதியினருக்கும் சொந்தமானது - கலவரம் நடந்த வீரளூரில் இரு சமுதாய மக்களிடையே எ.வ.வேலு பேச்சு

’’வீரளூர் கலவரம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாக எ.வ.வேலு வேதனை’’

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி இறந்துபோன தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஊர் பொது பாதையில் கொண்டு செல்வது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வந்த தெருக்கள் மீது மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டது.  20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.  

இந்த விவகாரத்தில் கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 21 நபர்களை கைது செய்துள்ளனர். 250க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வரும் நிலையில் வீரளூர் முழுவதும் தொடர்ந்து காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்டர் நேரில் பார்வையிட்டு இருவழி பாதை முறை ஒழிக்கப்பட்டு ஒரே வழி பாதை என உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

அரசாங்க சாலைகள் அனைத்து சாதியினருக்கும் சொந்தமானது - கலவரம் நடந்த வீரளூரில் இரு சமுதாய மக்களிடையே எ.வ.வேலு பேச்சு

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தெருக்களுக்கு நேரடியாகச் சென்று சேதங்கள் குறித்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா எனவும் பாதிக்கப்பட்டு சேதமடைந்த பொருட்களுக்கு அனைத்தும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்து ஆய்வு செய்தார்.

முதலாவதாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்த சமாதான கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு:- தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் என்பது கண்டனத்துக்குரியதாகும். தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த பகுதியில் பாதுகாப்பாக வாழ அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்து தரப்படும். மனம் மாற்றம் ஒன்றே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும், மனமாற்றம் இல்லை என்றால் பிரச்சனை அதிகரிக்கும். இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். தற்போது உள்ள அரசு, சாதி மதம் வேறுபடுத்தி பார்ப்பதில்லை.

அரசாங்க சாலைகள் அனைத்து சாதியினருக்கும் சொந்தமானது - கலவரம் நடந்த வீரளூரில் இரு சமுதாய மக்களிடையே எ.வ.வேலு பேச்சு

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, அருந்ததியின மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கினார். இதன் காரணத்தால் இன்று அருந்ததியின மக்கள் டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரிகளாகவும் உள்ளனர். சாதி மதத்தை பார்த்தால் யாரும் எந்த கிராமத்திலும் வாழ முடியாது. உங்கள் பிரச்சினையை அறிந்தவுடன் முதல்வரிடம் பேசி அரசு அதிகாரிகளை அனுப்பி  உங்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளேன்.

உங்கள் கிராமத்தில் காவல்துறையினர் எத்தனை நாள் பாதுகாப்பு வழங்க முடியும். உங்கள் மனதை தேற்றிக்கொண்டு காவல்துறையினருக்கு விடை கொடுங்கள். இனி எந்த பிரச்சினையும் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினர். இதன் பின்னர் அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் மனுக்களை கொடுத்தனர். இதையடுத்து மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தேவைகளையும் உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அரசாங்க சாலைகள் அனைத்து சாதியினருக்கும் சொந்தமானது - கலவரம் நடந்த வீரளூரில் இரு சமுதாய மக்களிடையே எ.வ.வேலு பேச்சு

இதனை தொடர்ந்து ஊரின் மையப்பகுதியில் ஊர் பொதுமக்கள் மத்தியில் நடந்த சமாதான  கூட்டம் நடைபெற்றது:- இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டனர்.  அப்போது பெண்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களாக எங்கள் கிராமத்தில் ஒரு ஆண்கள் கூட இல்லை. இதற்கு யார் காரணம். என்ன சம்பவம் நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் தலைமறைவாகவும் நாங்கள் அனைவருமே குற்றவாளிகளாகவும் போலீஸ் தரப்பில் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், இந்த தாக்குதல் சம்பவம் வருத்தத்துக்கு உரியதாகும். நாட்டில் சாலைகள் யாருக்கும் சொந்தமில்லை. அரசாங்க சாலை அனைத்து சாதியினருக்கும் சொந்தமானது. பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஊர் மக்களின் நலன் கருதி அரசு சார்பில் 10 நாட்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு செய்து இரு தரப்பிலும் சமாதானமாக செல்ல வேண்டும் என்றார்.  இந்த சம்பவம் மாவட்டத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீரளூர் வருகையையொட்டி துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget