மேலும் அறிய

ரயில்வே கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கூலித்தொழிலாளி மண்சரிவில் சிக்கி உயிரிழப்பு..!

மீட்கப்பட்ட தொழிலாளி ரவிக்கு உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் சி பி ஆர்  (CPR)  உள்ளிட்ட முதலுதவி அளித்தனர்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் ரயில்வே சிக்னல் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது மண் சரிவில் சிக்கி பரிதமாக உயிர் இழந்துள்ளார். இவருடன் மணலில் சிக்கிய மூன்றுபேர் , சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். வாலாஜா ரயில் நிலையத்தில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர், மண்சரிவில் சிக்கி உயிர் இழந்துள்ளார். 


ரயில்வே கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கூலித்தொழிலாளி மண்சரிவில் சிக்கி உயிரிழப்பு..!

இராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சிக்னல் கேபிள் பதிக்கும் பணியை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த சீனிவாசலு பாபு என்பவர் ஒப்பந்தம்  எடுத்துள்ளார். இப்பணியினை மேற்கொள்ள கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் கொப்பல் மாவட்டம் எல்லித்தோடி கிராமத்தைச் சேர்ந்த ரவி வயது 36 மற்றும் , இவரது மனைவி மாரியம்மாள் வயது 23 ஆகிய இருவரும் மற்ற தொழிலாளிகளுடன் இனைந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் கேபிள் பதிக்கும்  வேலை செய்து வருகின்றனர் .


ரயில்வே கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கூலித்தொழிலாளி மண்சரிவில் சிக்கி உயிரிழப்பு..!

இன்று காலை 9 மணி அளவில் கேபிள் பதிப்பதற்கான  பள்ளத்தில் இறங்கி, இணையர் உட்பட 4 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக மண்சரிந்து 4 பேர் மீதும் விழுந்தது. இதில் ரவி மட்டும் மண்ணில் சிக்கிக்கொண்டார். ரவி மனைவி உட்பட மற்ற மூன்று தொழிலாளர்களும் சிறு காயங்களுடன் தப்பினர். புதையுண்ட ரவியைக் காப்பாற்றும் பணியை மேற்கொண்டு மற்ற தொழிலாளர்கள் , அதே சமயத்தில் காட்பாடி ரயில்வே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.


ரயில்வே கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கூலித்தொழிலாளி மண்சரிவில் சிக்கி உயிரிழப்பு..!

தகவலின்பேரில் காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக் சாற்பத்தி,   அரக்கோணம் ரயில்வே ஆய்வாளர் சத்தூரி மார்க் ,  காட்பாடி எஸ்ஐ எழில்வேந்தன்,  ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை  தீவிரப்படுத்தினர். பள்ளம் மிகவும் ஆழமாக இருக்கவே ரவியை மீட்கும் பணி சிறிது தொய்வு அடைந்தது , எனவே அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு ரவியை  மீட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளி ரவிக்கு உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் சி பி ஆர்  (CPR)  உள்ளிட்ட முதலுதவி அளித்தனர்.


ரயில்வே கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கூலித்தொழிலாளி மண்சரிவில் சிக்கி உயிரிழப்பு..!

எனினும் அவரிடமிருந்து எந்த அசைவும் காணப்படவில்லை, எனவே அவரை உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அவர் இறந்ததை உறுதி செய்த  வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக, வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கிவரும் பிணவறைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ரவியுடைய மனைவி மற்றும் அவருடன் பணிபுரிந்த மற்ற தொழிலாளர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Embed widget