![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சீமானை கைது செய்ய கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் திமுக புகார் மனு
பொது மேடையில் செருப்பை காட்டி திமுகவை சங்கி என கூறிய விவகாரம் தொடர்பாக சீமானை கைது செய்ய கோரிக்கை
![சீமானை கைது செய்ய கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் திமுக புகார் மனு DMK IT wing filed a complaint against NTK coordinator Seeman. சீமானை கைது செய்ய கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் திமுக புகார் மனு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/8d7a12b79c15514840a1afc72086e800_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவை சங்கி என கூறி செருப்பை தூக்கி காட்டினார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சீமானை கைது செய்யக்கோரி வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Watch Video: ‛என்னை சங்கினு சொன்ன....’ செருப்பை தூக்கி எச்சரித்த சீமான்!
திமுகவினர் அளித்துள்ள மனுவில் அண்மையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், திமுகவையும், திமுக தொண்டர்களையும் மேடையிலேயே செருப்பை கழட்டி அடிப்பேன் என்று பேசியது திமுக தொண்டர்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பதற்றமடைய செய்துள்ளது.
அவர் பேசிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே தொடர்ந்து அவதூறுகளையும், அரசியல் அநாகரிகங்களையும் அரங்கேற்றி வரும் சீமானை உடனடியாக கைது செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)