மேலும் அறிய

ராணிப்பேட்டையில் சுவர் இடிந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 72 வயது மூதாட்டி உயிரிழப்பு

’’ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 144 கூரை மற்றும் ஓட்டு வீடுகள் பகுதி அளவும், 24 வீடுகள் முழுவதுமாகவும் சேதம் அடைந்துள்ளது’’

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக  கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக வடமாவட்டங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று வரை பெய்து வந்தது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அடுத்த மிஷன் தெரு பகுதியை  சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி ஞானம்மாள்.
 

ராணிப்பேட்டையில் சுவர் இடிந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 72 வயது மூதாட்டி உயிரிழப்பு
 
இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக, ஞானம்மாள் தங்கியுள்ள வீட்டின் பக்கவாட்டு சுவர் பலவீனமடைந்து உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டில் ஞானம்மாள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மழை காரணமாக பலவீனம் அடைந்திருந்த சுற்றுச் சுவர் திடீரென்று இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. சுவர் விழுந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது ஞாம்மாளின் வீட்டுச் சுவர் விழுந்துள்ளது தெரியவந்தது.
 
இதனையடுத்து இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த மூதாட்டியை மீட்ட பொதுமக்கள் ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஞானம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மூதாட்டி உயிரிழப்பு குறித்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு இடிந்துகிடந்த வீட்டை ஆய்வு செய்தார். மேலும் இவ்விபத்து தொடர்பாக ரத்தினகிரி காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மூதாட்டிக்கு ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் கைத்தறித்துறை அமைச்சருமான ஆர்.காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

ராணிப்பேட்டையில் சுவர் இடிந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 72 வயது மூதாட்டி உயிரிழப்பு
 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகப் பாலாற்றில் 16 ஆயிரம் கன அடி வெள்ளமும், பொன்னை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி வெள்ளமும் வந்துகொண்டுள்ளது.  இதன் காரணமாக பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 7 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 144 கூரை மற்றும் ஓட்டு வீடுகள் பகுதி அளவும், 24 வீடுகள் முழுவதுமாகவும் சேதம் அடைந்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
Colorectal Cancer: பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து.. இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அவசியம்!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Biggboss Tamil: பிக்பாஸ் கருமத்தை ஏன் பாக்குறீங்க? கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்
Udumalpet Power Cut (5-01-2026): உடுமலைப்பேட்டையில் நாளை முக்கியப் பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை முக்கியப் பகுதிகளில் பவர் கட்! இதோ லிஸ்ட்
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Embed widget