மேலும் அறிய

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கு; டீக்காராமனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 16-கிலோ தங்க நகைகள் 1-கிலோ வைரம் மற்றும் பிளாட்டினம் திருடிய வழக்கில் குற்றவாளி டீக்காராமனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. இந்த கடையில், 2021-டிசம்பர் மாதம் 14-ம் தேதி அன்று கடையின் பின்புறம் சுவரைத் துளையிட்டுக் நள்ளிரவு புகுந்து மர்ம நபர் ஒருவர் நகைகளைத் திருடிச் சென்றார். இது தொடர்பாக அடுத்த நாள் 15-ம் தேதி காலையில் கிடைத்த தகவலின் பேரில் அப்போதைய வேலூர் சரக டிஐஜியாக இருந்த ஏ.ஜி.பாபு, அப்போதைய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் கடையினுள் புகுந்த ஒல்லியான தேகத்துடன் இருக்கும் நபர் ஒருவர் சிங்கத்தின் முகமூடியை அணிந்துகொண்டு அனைத்து கண்காணிப்பு கேமராக்களிலும் ஸ்ப்ரே அடித்துவிட்டு ஷோகேஸ்களில் இருந்த விலை உயர்ந்த நகைகளைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றார்.

 


வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கு; டீக்காராமனுக்கு  3 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

நகை திருட்டு 

கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல்கள், நெக்லஸ்கள், கம்மல்கள் மற்றும் 819. கிராம் எடையுள்ள வைர மோதிரங்கள், 53.கிராம் எடையுள்ள சிறிய வைர மோதிரங்கள், 240 கிராம் எடையுள்ள வைர நெக்லஸ்கள், 100 கிராம் எடையுள்ள பிளாட்டினம் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இந்த வழக்கில் 8 தனிப்படைகள் அமைத்து விசாரித்த காவல் துறை, மேலும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேஜிஎப் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ராஜஸ்தான் மாநிலத்துக்கும் தனிப்படையினர் சென்றனர். இதற்கிடையில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா பகுதியை சேர்ந்த டீக்கா ராமன் (23) என்பவனை காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நகைகளை அவர் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றங்கரை மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கு; டீக்காராமனுக்கு  3 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

 

3 ஆண்டுகள் சிறை தண்டனை 

இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படையினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளைப் பத்திரமாக மீட்டு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் ஒப்படைத்தனர். பின்னர் நகை திருடிய டீக்காராமனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு ஜே.எம். 4 நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்போடு டீக்காராமனை போலீசார் அழைத்து ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு ஜே.எம்.4 நீதிபதி ரோஸ் கலா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் 1 மணி நேரம் டீக்கராமனிடம் விசாரணை நடந்தது விசாரணையின் போது, டீக்கராமன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் டீக்காராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரோஸ் கலா தீர்ப்பு அளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget