மேலும் அறிய

திருச்சியில் கழிவுகளை வீதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருச்சியில் டீக்கடைகள், வீடு கட்டுவோர் கழிவுகளை வீதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாநகர பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் அவர்களின் அதிரடி நடவடிக்கை மற்றும் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வியாபரம் செய்வது, சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட செயல்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதைத்தொடர்ந்து மாநகரில் செயல்படும் ஓட்டல்கள், டீ கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வியாபாரிகள் வியாபாரம் செய்யும் போது அந்த கடைகளின் குப்பைகளை முறையாக குப்பைத் தொட்டி வைத்து மாநகராட்சி குப்பை வாகனங்கள் வரும் பொழுது எடுத்து கொட்டவேண்டும்.  அவ்வாறு செய்யாமல் குப்பைகளை கடைகளுக்கு முன்பாக வைத்திருத்தல், சாலைகளில் வீசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருச்சியில் கழிவுகளை வீதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சி மாநகர் பகுதியில் தற்போது தூய்மை பணிகள் நல்ல முறையில் நடந்து வருகிறது. இன்று காலையில் உய்கக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ளும் போது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக வீடு கட்டும் கழிவுகள், டீ கடைகளில், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வரும் குப்பைகளை சாலையில் ஏதாவது ஒரு மூலையில் கூட்டி வைத்திருந்தாலோ, அல்லது கொட்டி வைத்திருந்தாலோ அதை அதிகாரிகள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் வியாபாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தொடர்ந்து வீடு கட்டும் கழிவுகளை சாலையோரம் பொது மக்களின் சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் கொட்டி வைத்தால் அதை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.


திருச்சியில் கழிவுகளை வீதியில் கொட்டினால் கடும் நடவடிக்கை -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் முககவசம் அணிதல், கூட்டம் கூடுவதை தவிர்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்குபடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறோம் என தெரிவித்தார். குறிப்பாக கடைகள், டீ கடைகள், மாளிகை கடைகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அரசின் விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அரசின் கட்டுபாடுகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கூறினார். மேலும் மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget