மேலும் அறிய

திருச்சி: துறையூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் அவதி.

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதேபோல் பச்சைமலை பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் மலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அந்த தண்ணீர் மலை வழியாக கீரம்பூர் செங்காட்டுப்பட்டி ஏரியை வந்தடைந்தது. இதையடுத்து அங்கிருந்து துறையூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அந்த ஏரி நிரம்பி வழிந்த நிலையில், வெள்ள நீரானது குடியிருப்பு பகுதிகளாக பாலக்கரை பெருமாள் கோவில் தெரு, கீழ குத்தி தெரு, மேல குத்தி தெரு, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளை சூழ்ந்தது. இதில் தெப்பக்குளம் நிறைந்து வெளியேறிய தண்ணீர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இது பற்றி தகவல் அறிந்த துறையூர் நகராட்சி ஊழியர்கள், ஒரு சில இடங்களில் மட்டுமே முன்னேற்பாடு மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஒரு சில இடங்களில் வீடுகளில் நள்ளிரவில் தண்ணீர் முழுவதும் உட்புகுந்தது. தண்ணீருடன் பாம்பு, தேள் மற்றும் விஷ ஜந்துக்களும் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை என்று நகராட்சி ஊழியர்கள் மீது அப்பகுதி மக்கள் புகார் கூறினர். 


திருச்சி: துறையூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி

மேலும் துறையூர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், ஆங்காங்கே கழிவுகளும் குவிந்துள்ளது. துறையூர் பஸ் நிலையம், திருச்சி சாலையில் உள்ள சின்ன பாலம், பாலக்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, நோய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருச்சி: துறையூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி

இதனை தொடர்ந்து துறையூரில் பெரிய ஏரியில் இருந்து வெள்ளநீர் வெளியேறி கடைக்கால் வழியாகவும், சின்னப்பாலம் வழியாகவும் சென்று சின்ன ஏரியை அடைந்து, அங்கிருந்து வெளியேறுகிறது. அங்கு வெள்ள நீருடன் மரக்கட்டைகளும், குப்பைகளும் அடித்து வரப்பட்டது. மேலும் துறையூர் நகராட்சி ஊழியர்கள், ஏற்கனவே மலைபோல் குவிந்திருந்த குப்பைகளை வெள்ளநீரில் கொட்டினர். இதனால் துறையூரில் உள்ள சின்ன ஏரி முழுவதும் குப்பைகளால் நிரம்பி உள்ளது. நகராட்சி ஊழியர்களே பொறுப்பற்ற நிலையில் குப்பைகளை அதிகாரிகள் முன்பு ஏரியில் வீசியது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  இந்த பகுதிகளை சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தையும் முறையாக தூர்வாரி, தடுப்பு அணை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் திருச்சி மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Embed widget