மேலும் அறிய

திருச்சி மாநகராட்சி 62 வார்டு கவுன்சிலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி பகுதியில்  350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பூர்வீககுடி முருகன் கோவில்  ராமச்சந்திர நகர் பகுதியில்  அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் நத்தம் புறம்போக்கு என்று அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ராமச்சந்திரன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து எடமலைப்பட்டி பொதுமக்கள் ஆண்டாண்டு காலமாக அந்த முருகன் கோவிலை பராமரித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சமூக விரோதிகள் அதிக அளவில் கோவில் வளாகத்தில் தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையை முழுமையாக தடுத்திட வேண்டும் என்று எடமலைப்பட்டி பகுதி மக்கள் ஒன்றிணைந்து நிதியை திரட்டி கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுசுவர் அமைக்கும் பணியை தொடங்கினர். 

இந்தப் பணிகள் அனைத்தும் முறைப்படி நீதிமன்ற அனுமதி பெற்று நடைபெற்று வந்துள்ளது. ஆனால் அந்த சுற்றுச்சுவரை கட்டக்கூடாது எனவும் கட்டிய சுவரை ராமச்சந்திர நகர் மக்கள் இடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டி இன்று எடமலைப்பட்டி புதூர் மேம்பாலம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


திருச்சி மாநகராட்சி 62 வார்டு கவுன்சிலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

மேலும் இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி பொதுமக்களிடம் கேட்டபோது "கோவில் வளாகத்தில் நடைபெறக்கூடிய தவறான செயல்களை தடுப்பதற்காக அரசு அனுமதி மற்றும் நீதிமன்ற அனுமதி பெற்று சுற்றுசுவர் அமைக்கும் பணியை நாங்கள் தொடங்கினோம். ஆனால் ராமச்சந்திர நகர் பகுதியில் ஒரு சில மக்கள் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்த்து வருகிறார்கள். இது குறித்து காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுபா அவர்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மாமன்ற உறுப்பினர் சுபா மற்றும் அப்பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் ராமச்சந்திர நகர் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் ஏதோ ஒரு சில காரணத்திற்காக கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகிறார்கள். எங்களுடைய பூர்வீக குடி கோவிலான முருகன் கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் முறையாக அதை பராமரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய கோரிக்கை. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


திருச்சி மாநகராட்சி 62 வார்டு கவுன்சிலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 57 வார்டு கவுன்சிலர் முத்துசெல்வம் தாமாக முன்வந்து ,பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பின்பு 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வில்லை. உடனடியாக தனது மாமன்ற உறுப்பினர் அலுவலக கடிதத்தில் உங்களுகைய பிரச்சனையை நான் முன் நின்று தீர்த்துவைக்கிறேன் என்று தனது கைபட எழுதி கொடுத்தார். இந்த விவகாரத்தில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நானே முன் நின்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று உறுதி அளிதத பிறகு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 


திருச்சி மாநகராட்சி 62 வார்டு கவுன்சிலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேசுகையில்.. நாங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த கவுன்சிலர் எங்களை கண்டுக்கொள்ள வில்லை. ஆனால் எங்களுடைய வார்டு பிரச்சினையை , தனது வார்டு மக்களின் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் எங்களுக்கு ஆதரவு அளித்தது மகிழ்ச்சி என்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget