மேலும் அறிய

2 மகன்களுடன் காவிரியில் மூழ்கிய தாய்; குடும்ப பிரச்னையால் விபரீத முடிவு

குடும்ப பிரச்னையில் முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி 2 மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்றார். இதில் மகன்கள் கரைக்கு வந்து தப்பினர். தாயை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, தெற்கு லந்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவரது மனைவி அங்கம்மாள் (33). இந்த தம்பதிக்கு செல்வகுமார் (11), சிவகுமார் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தீபாவளி பண்டிகை அன்று இரவில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அங்கம்மாள் தீபாவளிக்கு மறுநாள் மகன்களை அழைத்துக்கொண்டு திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு வந்தார். இதனையடுத்து அவர் மகன்களுடன் பஸ்சில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு வந்தார். அதன் பின் அவர், மகன்களுடன் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவில் உள்ள பகுதிக்கு சென்றார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து காணப்பட்ட அங்கம்மாள் மகன்களின் கைகளை பிடித்துக்கொண்டு காவிரி ஆற்றில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சுதாரித்துக்கொண்ட மகன்கள் 2 பேரும் தாய் அங்கம்மாளின் பிடியில் இருந்து மீண்டதுடன், தாயையும் தடுத்து நிறுத்த போராடியுள்ளனர்.


2 மகன்களுடன் காவிரியில் மூழ்கிய தாய்; குடும்ப பிரச்னையால் விபரீத முடிவு

மேலும்  ஒரு கட்டத்தில் ஆற்றில் ஆழமான பகுதி வரவே மகன்கள் 2 பேரும் தப்பி கரைக்கு வந்தனர். ஆனால் மகன்கள் கண் முன்னே அங்கம்மாள் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதைக்கண்ட மகன்கள் இருவரும் அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி அழுதுள்ளனர். மேலும் பெட்டவாய்த்தலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேரில் சென்ற சிறுவர்கள் நடந்த சம்பவத்தை கூறிகதறி அழுதனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வாத்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார், திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.


2 மகன்களுடன் காவிரியில் மூழ்கிய தாய்; குடும்ப பிரச்னையால் விபரீத முடிவு

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக ஸ்ரீரங்கம் மற்றும் மேலூர் பகுதிகளில் காவிரி ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அங்கம்மாள் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து அங்கம்மாள் சகோதரர் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget