மேலும் அறிய

சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - திருச்சியில் கொதித்தெழுந்த மக்கள்

திருச்சியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம், இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

திருச்சி மாநகர், வாமடம் என்ற பகுதியில் தாத்தா-பாட்டி வீட்டில் 9 வயது சிறுமி தங்கி 4ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானாள். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால் சிறுமியின் தாத்தா தில்லை நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்பு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர், அப்போது சத்திரம் பேருந்து நிலையத்தில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் சென்று சிறுமியை மீட்டு விசாரித்தனர்.

அப்போது சிறுமி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில்.. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை வாலிபர் ஒருவர் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். சத்திரம் பஸ் நிலையம் அழைத்து சென்று, அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு சென்று இரவு முழுவதும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் காலை மீண்டும் சிறுமியை சத்திரம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு தப்பியுள்ளார் என தகவல் தெரியவந்தது. 


சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - திருச்சியில் கொதித்தெழுந்த மக்கள்

இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை தீவிரபடுத்தினர்.

மேலும், அந்த வாலிபர் திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்த சின்ராசு(24) என்பதும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த சின்ராசுவை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய சின்ராசு தடுமாறி விழுந்ததில் கால் முறிந்தது.

இதையடுத்து போலீசார் சின்ராசுவை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் கூறுகையில்.. சின்ராசுக்கு சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் முதல் திருமணம் நடந்தது. சில மாதங்களில் மனைவி பிரிந்து சென்றார். தொடர்ந்து, சேலத்தில் 2வது திருமணம் செய்துள்ளார். அவரும், சில மாதங்களில் சின்ராசுவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சின்ராசு இதுபோன்ற செயலில் மற்ற பகுதிகளில் ஈடுபட்டுள்ளாரா? என்று விசாரணை நடக்கிறது என்றனர்.


சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - திருச்சியில் கொதித்தெழுந்த மக்கள்

இந்நிலையில் திருச்சி வாமடம் பகுதியில் பொதுமக்கள் சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணமான நபருக்கு அதிகபட்ச தண்டையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று , திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

இதனைதொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
IND vs ENG 4th Test: நெருக்கடியில் இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வி தர துடிக்கும் இங்கிலாந்து! போராடும் கில் - ராகுல்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Embed widget