மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 45 வீரர்கள் காயம்

திருச்சி மாவட்டம் அருகே இருங்களூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள் சீறிபாய்ந்தது. - ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது, தை மாதம் முதல் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பல்வேறு பகுதிகள் தொடர்ந்து நடைபெறும். அந்த வகையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 750க்கு மேற்பட்ட காளைகளும், 150 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் காளைகள் முட்டியதில் 45 வீரர்கள் காயமடைந்தனர். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு போட்டி. இந்த வீர விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவ்டடம் சமயபுரம் அருகே தெற்கு இருங்களூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளை அடக்குவதற்காக 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக பெயர்களை பதிவு செய்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதேபோல் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஊராட்சி தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். லால்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் மற்றும் மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி ஆகியோர் கொடிஅசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். மேலும் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டர். இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினா்.


திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 45 வீரர்கள் காயம்

மேலும், பல காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் துள்ளிக்குதித்து ஓடின. சில காளைகள் களத்தில் சிறிது நேரம் நின்று வீரர்களுக்கு போக்கு காட்டியது. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் காளைகளை அடக்கியபோது வீரர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உள்பட 45 பேர் காளை முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு உள்ள மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதில் சிலர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை காண மண்ணச்சநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். வாடி வாசலின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் ஏறி நின்று அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து பார்த்தனர். லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 150 -க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - மோடி அதிரடி
Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - மோடி அதிரடி
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Modi Speech Today: இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
Gold Rate 12th May: ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - மோடி அதிரடி
Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - மோடி அதிரடி
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Modi Speech Today: இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
Gold Rate 12th May: ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
Rameswaram Train Timing: ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு, ஏன் தெரியுமா.? எல்லாம் நல்ல விஷயம்தான்
ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு, ஏன் தெரியுமா.? எல்லாம் நல்ல விஷயம்தான்
TNGASA 2025: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- மே 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை- மே 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
அடேங்கப்பா! மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம்! எது தெரியுமா?
அடேங்கப்பா! மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம்! எது தெரியுமா?
சர்ச்சையில் சிக்கிய நடிகர் சந்தானம்... டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடை?
சர்ச்சையில் சிக்கிய நடிகர் சந்தானம்... டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடை?
Embed widget