மேலும் அறிய

திடீர் மழையால் திருவெறும்பூரில் கொள்முதலுக்காக வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சேதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் மற்றும் பத்தாளப் பேட்டையில் 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதால் விவசாயிகள் வேதனை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் மற்றும் பத்தாளப் பேட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கியதால் தற்போது பெய்து வரும் மழையின் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் திருவெறும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் நடப்பட்டது. நடவு செய்யப்பட்ட பொழுது அதற்கான உரங்கள் கிடைக்காமலும் கூட்டுறவு வங்கிகளில் உரிய கடன் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.  இப்படி பல்வேறு போராட்டங்களுக்கு இடையே சம்பா நடவு செய்து  அது பால் வரும் பருவ நிலையில்  விவசாயிகளுக்கு பேரிடியாக  நெற்பயிரில் புகையான் மற்றும் நெல்பழம் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால்  திருவெறும்பூர் பகுதிகளில் மகசூல் ஏக்கருக்கு பத்து மூட்டை வரை பாதிப்பு ஏற்பட்டது தற்பொழுது அறுவடை துவங்கி உள்ள நிலையில் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு 20 நாட்கள்   காத்துக் கிடக்கும் அவல நிலையில் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் என்றார். திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் பகுதியில் குடிநீர் பற்றி உள்ளிட்ட பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.


திடீர் மழையால் திருவெறும்பூரில் கொள்முதலுக்காக வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சேதம்

இதனை தொடர்ந்து கொள்முதல் செய்வதற்கு ஒரு இயந்திரம் போதியதாக இல்லை இது குறித்து ஆண்டுதோறும் விவசாயிகள்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதும் வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு இரண்டு இயந்திரங்கள் கொண்டு உடனடியாக நெல்மணிகளை தூற்றி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு இரண்டாவது இயந்திரம் கொண்டு வந்து நெல்மணிகளை தூற்றி கொள்முதல் செய்தனர். அது போல் இந்த ஆண்டும் செய்ய வேண்டும் என கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதன் பயனாக உடனடியாக இரண்டாவது நெல் கொள்முதல் செய்வதற்காக தூற்றும் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்குரிய ஆட்களை போட்டு நெல்மணிகளை தூற்றி கொள்முதல் செய்யவில்லை. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் முட்டைகள் அளவிற்கு நெல்மணிகள் குவியல் குவியல்களாக தேங்கி உள்ளது. மேலும்  இரண்டு நாட்களாக பெய்த மழையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நெல்மணிகள் நனைந்துள்ளது. நெல் கொட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து மழைநீரை வடிய  வைப்பதற்காக மோட்டார் மூலம் வடிய வைக்கும்பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனவே அரசு அதிகாரிகள் கடந்த வாரமே கூடுதல் இயந்திரம் மூலம் நெல் கொள்முதல் பணியை தொடங்கி இருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் குறைந்து இருக்கும் என்றும் தற்போது சுமார் 20 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்,


திடீர் மழையால் திருவெறும்பூரில் கொள்முதலுக்காக வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சேதம்

மேலும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கியுள்ள நெல் முட்டைகளை பிடிப்பதற்கு வழிவகை செய்வதோடு ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் பத்தாளப்பேட்டைபகுதியில் கூடுதல் நெல்  கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பத்தாளப்பேட்டையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் சுமார் 1700 ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சுமார் 1200 ஏக்கர் மட்டுமே அறுவடை செய்யப் பட்டுள்ளதாகவும் இன்னும் 500 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யப் படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை அளவிற்கு நெல்மணிகள் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு பத்தாளப்பேட்டை கூத்தைப் பார் ஒரு பகுதி, திருநெடுங்களம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மேலும் நெல் மணிகள் வருவதாகவும் ஒரு நாளைக்கு 700  சிற்பங்கள் வரை மட்டுமே பயன்படுத்துவதாகவும் தற்போது பத்தாயிரம் சிப்பநெல்மணி அளவிற்கு இங்கு தேங்கி உள்ளதாகவும் கூடுதல் மிஷின்களை இறக்கி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்ய அரசு முன் வராத பட்சத்தில் இந்த பகுதியில் வரும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RSS Chief on Retirement: “75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
“75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
Bikes GST Hike: ப்ரீமியம் பைக் வாங்க பிளான் வச்சுருக்கீங்களா.? உடனே வாங்கிடுங்க - வரி 40% ஆகப் போகுது
ப்ரீமியம் பைக் வாங்க பிளான் வச்சுருக்கீங்களா.? உடனே வாங்கிடுங்க - வரி 40% ஆகப் போகுது
China Russia N.Korea: சீனா செல்லும் கிம் ஜாங் உன், புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி.?
சீனா செல்லும் கிம் ஜாங் உன், புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RSS Chief on Retirement: “75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
“75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று நான் கூறவில்லை“ - ஆர்எஸ்எஸ் தலைவரின் அந்தர் பல்டி
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
Bikes GST Hike: ப்ரீமியம் பைக் வாங்க பிளான் வச்சுருக்கீங்களா.? உடனே வாங்கிடுங்க - வரி 40% ஆகப் போகுது
ப்ரீமியம் பைக் வாங்க பிளான் வச்சுருக்கீங்களா.? உடனே வாங்கிடுங்க - வரி 40% ஆகப் போகுது
China Russia N.Korea: சீனா செல்லும் கிம் ஜாங் உன், புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி.?
சீனா செல்லும் கிம் ஜாங் உன், புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி.?
IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
IIT: அனைவருக்கும் ஐஐடி; இந்த ஆண்டு மட்டும் 28 அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை- மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
பள்ளிக் கல்விக்கு இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்!
Russia Fuel Crisis: ரஷ்யாவில் ட்ரோன் மூலம் சம்பவம் செய்த உக்ரைன்; பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - மக்கள் அவதி
ரஷ்யாவில் ட்ரோன் மூலம் சம்பவம் செய்த உக்ரைன்; பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - மக்கள் அவதி
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
Embed widget