மேலும் அறிய

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக அடுத்த மாதம் மூடப்படுகிறது - அதிகாரிகள் தகவல்

திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக அடுத்த மாதம் முதல் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யபட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலத்தில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், பஸ்கள், வேன், கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என பல்வேறு வகையான வாகனங்கள் சென்று வருகின்றன. சில ஆண்டுகளாக பாலத்தை தாங்கும் தூண்களில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறு ஏற்பட்டது. இந்த பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் ரூ.1 கோடியே 35 லட்சமும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சமும், செப்டம்பரில் ரூ.15 லட்சமும், 2018-ம் ஆண்டு நவம்பரில் ரூ.80 ஆயிரமும் செலவிடப்பட்டது. மேலும் கடந்த ஆட்சியின்போது, நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தபோது, பாலம் கட்டப்பட்டு 46 ஆண்டுகள் முடிந்துவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளாலும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டியது தெரியவந்தது. இதனால் இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை முடிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக அடுத்த மாதம் மூடப்படுகிறது - அதிகாரிகள் தகவல்

மேலும் காவிரி பாலம் அடிக்கடி சேதமடைவதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல விபத்துகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கேன்.என். நேரு விரைவில் பாலத்தினை முழுமையாக சீரமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். மேலும் பராமரிப்பு பணிக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து காவிரி பாலத்தில் போக்குவரத்துக்கு ஏற்றபடி, ரூ.6 கோடியே 87 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக போக்குவரத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து, காவல்துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் காவிரி பாலத்தில் நேரடியாக ஆய்வு நடத்தினார். அப்போது வடக்கு காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக அடுத்த மாதம் மூடப்படுகிறது - அதிகாரிகள் தகவல்

மேலும், காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளநிலையில் சிந்தாமணியில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓடத்துறை, ஓயாமரி வழியாக சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பாலத்தின் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததுடன் அருகிலியே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கபடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருச்சியில் தெருநாய்கள் தொல்லைக்கு குட்பை... அக்டோபரில் தீர்வு: மாநகராட்சியின் அதிரடி மெகா பிளான்
திருச்சியில் தெருநாய்கள் தொல்லைக்கு குட்பை... அக்டோபரில் தீர்வு: மாநகராட்சியின் அதிரடி மெகா பிளான்
போதை ஒழிப்பு உறுதிமொழியுடன் திருச்சியில் நடைபெற்ற ‘We the Leaders’ நிகழ்வு: இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு
போதை ஒழிப்பு உறுதிமொழியுடன் திருச்சியில் நடைபெற்ற ‘We the Leaders’ நிகழ்வு: இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு
₹483 கோடியில் மெகா திட்டம்... திருச்சி போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை! என்ன விஷயம் தெரியுங்களா?
₹483 கோடியில் மெகா திட்டம்... திருச்சி போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை! என்ன விஷயம் தெரியுங்களா?
இரும்புச் சுவராக மாறும் ரோடு பிளாக்கர்... திருச்சி விமான நிலையத்தில் உலகத் தர தொழில்நுட்ப பாதுகாப்பு அரண்
இரும்புச் சுவராக மாறும் ரோடு பிளாக்கர்... திருச்சி விமான நிலையத்தில் உலகத் தர தொழில்நுட்ப பாதுகாப்பு அரண்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Embed widget