மேலும் அறிய

Crime: 8 பேரை ஏமாற்றி திருமணம்.... பணம், நகை மோசடி.. திருச்சி அருகே திருநங்கை கைது

வளநாடு அருகே கைது செய்யப்பட்ட திருநங்கை 8 பேரை திருமணம் செய்து பணம், நகையை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் (வயது 30). திருநங்கையான இவர் திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கம்மாள தெருவை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான முருகேசன் என்பவர் ஒரு சதுர அடி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக சுற்றுச்சுவரும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் அவரிடம் ரூ.10 லட்சத்தை பபிதா ரோஸ் வாங்கி பண பரிவர்த்தனையும் பெற்றுள்ளார். இதனால் தனக்கு வர வேண்டிய மொத்தம் ரூ.21 லட்சத்தை பபிதா ரோஸிடம் முருகேசன் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட முருகேசன் இது தொடர்பாக வளநாடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான திருநங்கை பபிதா ரோசை தேடி வந்தனர். இதேபோல் திருநங்கை வீட்டில் தச்சு வேலை செய்த ஜார்ஜ் ஆண்டணி தனக்கு ரூ.1½ லட்சம் தராமல் மிரட்டல் விடுப்பதாகவும் வளநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தன்மீதான புகார்கள் குறித்து தகவலறிந்த திருநங்கை பபிதாரோஸ் தலைமறைவானார். இந்தநிலையில், துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பபிதா ரோசை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவர தொடங்கியது.


Crime: 8 பேரை ஏமாற்றி திருமணம்.... பணம், நகை மோசடி.. திருச்சி அருகே திருநங்கை கைது

திருநங்கை தான் ஒரு சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு என்றும், சப்-கலெக்டராக பணிபுரிகிறேன். தனது சகோதரர்கள் காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதாகவும் திரைப் படத்துறையில் ஆர்வம் இருப்பதாகவும் கூறி பலரையும் ஏமாற்றியுள்ளார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளார். இதுவரை 8-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை அவர்களது குடும்பத்தாரிடம் தெரிவித்து விடுவதாக அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தால் மானம்போய்விடும் என கருதி புகார் தராமல் இருந்துள்ளனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பபிதா ரோஸ் தொடர்ந்து கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.


Crime: 8 பேரை ஏமாற்றி திருமணம்.... பணம், நகை மோசடி.. திருச்சி அருகே திருநங்கை கைது

இந்தநிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலராக பணி புரிந்து வரும் கார்த்திக்கின் மனைவி நித்யா கடந்த 17-ந் தேதி திருநங்கையால் பாதிக்கப்பட்ட சிலருடன் திருச்சி மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சுஜித்குமாரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து, மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் திருநங்கை பபிதா ரோஸை விசாரணைக்கு அழைத்தபோது இரவு ஆகிவிட்டதால் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் விசாரணைக்கு வராமல் 19-ந்தேதி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் கார்த்திக் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சத்தை பறித்துக் கொண்டதாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் திருநங்கை புகார் மனு அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. எனவே பபிதா ரோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியே வரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Embed widget