மேலும் அறிய

திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்.!

தொடர்கனமழையால் திருச்சி-வயலூர் சாலை, திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலைகளில் வெள்ளபெருக்கு இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1- திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாநகரில் விரிவாக்க பகுதிகளில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன,மேலும்  திருச்சி மாநகர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் கோரையாறு, உய்யகொண்டான், குடமுருட்டி ஆறுகளில்  நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்..

2- திருச்சி அருகே உள்ள புங்கனூர் இருந்து அல்லித்துறை செல்லும் வழியில் உள்ள அரியாற்றில் தொடர்கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கால் ஆற்றின் தென்கரையில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் 100 ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாக மூழ்கியதால் விவசாயிகள் வேதனையுடன் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

3- திருச்சி மாவட்டத்தில் சேதமடைந்துள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பான  சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். மேலும் கனமழை தொடர்வதால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

4- திருச்சி மாவட்டத்தில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் நேரு.இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் மணப்பாறை பகுதிகளில் அதிக மழை பெய்ததால் அன்பு நகர் வழியாக வரும் தண்ணீர் கொல்லான்குளத்தை நிரப்பி தேசியக் கல்லூரி வழியாக கோரையாற்தில் வடியும் இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது,அவற்றை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்த  சாலைகளை சீரமைக்க ரூ 600 கோடி நிதி  ஒதுக்கப்பட்டு டெண்டர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

5- திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்தி மேடு கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஐயன்வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. இதனால் சம்பா சாகுபடி மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதால் உடனடியாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

6- மணப்பாறை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஏராளமான குளங்களில் உபரிநீர் மறுகால் பாய்ந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மணப்பாறை குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் நீரால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து மக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7- திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள், நிரம்பி வழிகின்றன.  காரையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த  பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும்  அப்பகுதி முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது என  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8- திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் சேதமடைந்துள்ளது மேலும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அச்சத்தில்  வசித்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

9- திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் தொடர்ந்து நான்காவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

10- திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதேசமயம் கனமழை காரணமாக 1403 வீடுகள் இடிந்து விழுந்த உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மக்களுக்கு பாதுகாப்பான  சூழ்நிலையை ஏற்படுத்த அதிகாரிகள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Embed widget