மேலும் அறிய

தமிழ்நாட்டில் மறைமுகமாக பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - பாரிவேந்தர்

தமிழகத்தின் செங்கோலை பார்லிமெண்டில் நிறுவியதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடமைப்பட்டு உள்ளோம் என ஐ.ஜே.க பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இந்திய ஜனநாயக கட்சி சார்பில், திருச்சியில் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற மாநில மாநாடு நடைபெற்றது.  இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் பாஜக கட்சியில் கூட்டணி இருக்க கூடிய அரசியல் கட்சி தலைவர் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்திய ஜனநாயக  கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் பேசியது.. ”நாய்களை பயன்படுத்தி வேட்டையாடும் காட்டு நாயக்கர் இன மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஜக்கம்மாளை வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த சமுதாய மக்களை அழைத்துச் சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தேன். அதன் பேரில், நாய்களும், முயலும் வன விலங்கு பட்டியலில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்பட்டது. 


தமிழ்நாட்டில் மறைமுகமாக பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - பாரிவேந்தர்

மேலும், வேட்டி கட்டிய தமிழன் இந்த நாட்டை ஆள மாட்டானா? என்று பல ஆண்டு காலமாக பலரும் பேசியிருக்கின்றனர். அது நடக்க தான் போகிறது.  கடந்த 2014ல், குஜராத் முதல்வராக இருந்த போது, மோடியை எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்து வந்தோம். அப்போது, இருவரும் பெற்ற தாயை பற்றித் தான் அதிகம் பேசினோம். அப்போது, நீங்கள் ஆறு மாதத்தில் பிரதமராக வருவீர்கள், என்றேன். மோடிக்கு அந்த தகுதியும் இருந்தது. அவர் ஒரு தெய்வப்பிறவி, ஞானி, துறவி. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும், உயர்வு பெற்று இருக்கின்றனர். இந்தியாவின் பெயரை, புகழை உயர்த்துவதற்கு காரணமாக இருக்கும் மோடி, மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறார். தமிழகத்தின் செங்கோளை பார்லிமெண்டில் நிறுவியதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடமைப்பட்டு உள்ளோம். நாம் வாழும் தமிழ் பூமியில், பிரிவினையை மறைமுகமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையை எங்கு தான் கண்டுபிடித்தார்கள், என்று தெரியவில்லை. அவர்கள், அந்த வார்த்தையை சொல்லும் போது, நான் பெரிதும் புண்படுத்தப்படுகிறேன். நாட்டின் ஜனநாயகத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் ஊழல், லஞ்சம், மது ஒழிக்கப்பட வேண்டும். வரும் தேர்தலில், மீண்டும் வெற்றி பெறுவதன் வாயிலாக அதை செய்வோம் என்று மேடையில் பேசினார். 


தமிழ்நாட்டில் மறைமுகமாக பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - பாரிவேந்தர்

மேலும் என் தொகுதியின் மக்களின் கோரிக்கையை ஏற்று , மக்களுக்கு தேவையான ஒரு மேம்பாலத்தை கட்டி கொடுத்து அதன் அருகிலேயே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் இந்த மாநாடு அருகே உள்ள  திருப்பட்டூர் என்ற பகுதி அருகிலே இருக்கிறது. அங்கே தான் பிரம்மா என்று சிலையாக  வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த பிரம்மா என் தலையெழுத்தையும், உங்கள் தலையெழுத்தையும் ஏன் இந்தியாவில் தலையெழுத்தையும்,  ஏற்கனவே எழுதி விட்டு எப்படி நான் எழுதிய தலை எழுத்தை சரியாக தான் செய்ல்படுகிறார்களா  என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த பிரம்மா நம்மோடு இந்த மேடையில் இருப்பதாகவே நான் நம்புகிறேன். அதேபோன்றுதான் இந்தியாவின் மூன்றாவது முறையாக மீண்டும் மோடி ஆட்சி அமைப்பார் இந்திய மக்களுக்கு நல்லதையே செய்வார் என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
KKR vs SRH Match Highlights: மொத்தமாக சொதப்பிய கம்மின்ஸ் படை; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Rahul Tripathi: எதிர்பாராதவிதமாக ரன் அவுட்.. உடைந்து அழுத SRH வீரர் ராகுல் திரிபாதி! புகைப்படம் வைரல்
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?
'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!
'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!
Embed widget