மேலும் அறிய

ஊதாரியாக சுற்றிய மகனை நண்பர்களை வைத்தே போட்டுத்தள்ளிய தாய்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் உடபட 6 பேர் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சதீஷ்குமார் (32) இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும் சஞ்சனா (3) என்ற பெண் குழந்தையும் உள்ளது சதீஷ்குமார் சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி பகுதியில் உள்ள வறட்டு ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சதீஷ்குமாரின் உடல் மிதப்பதாக மண்ணச்சநல்லூர் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் அவரது நண்பர்கள் சிலருடன் தினமும் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்பதும் சம்பவத்தன்று அவரது நண்பர்கள் உடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் மன்னச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் காவல்துறையினர்,  சதீஷ்குமாரின் நண்பர்களே தேடிய போது அவர்கள் தலைமறைவாகி இருந்தனர்.


ஊதாரியாக சுற்றிய மகனை நண்பர்களை வைத்தே போட்டுத்தள்ளிய தாய்

இந்நிலையில் திருவெள்ளறை பகுதியில் நேற்று மறைந்திருந்த சதீஷ்குமாரின் நண்பர்கள் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதி புல்லட் ராஜா என்கிற ராஜா (41), காந்தி நகர் பகுதி கணேசன் மகன் ராஜா (22) , தெற்க்கு ஈச்சம்பட்டி சேக் அப்துல்லா (45), கல்பாளையம் சுரேஷ் என்கிற பாண்டி (29), வடக்கு ஈச்சம்பட்டி அரவிந்தசாமி (22), ஆகிய 5 பேரையும் மடக்கிப்பிடித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் சதீஷ்குமாரின் சொந்தவூர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடி. அங்கு அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலங்களை கடந்த ஆண்டு அவரது தாய் அம்சவள்ளி ரூபாய் ஒரு கோடியே 17 லட்சத்து விற்றுள்ளார் விற்ற பணத்தில் 6 லட்சம் ரூபாய் கடனை அடைத்து உள்ளார். மீதமிருந்த பணத்தை தலா 37 லட்சமாக பிரித்து சதீஷ்குமார் ஒரு பங்கும், அவரது அண்ணன் அமிர்தராஜ் ஒரு பங்கும், தாய் அம்சவள்ளி ஒரு பங்கும் வைத்துக்கொண்டனர் இதில் சதீஷ்குமார் தனது பங்கு பணத்தை குறித்தும் ஊதாரித்தனமாக செலவு வைத்துவிட்டு மீண்டும் தாய் அம்சவல்லி இடம் சென்று பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.


ஊதாரியாக சுற்றிய மகனை நண்பர்களை வைத்தே போட்டுத்தள்ளிய தாய்

இதனால் மனமுடைந்த  தாய் அம்சவள்ளி சதீஷ்குமாரின் நண்பர்களை அழைத்து இவன் திருந்த மாட்டான் இவனை எங்கேயாவது கூட்டி சென்று கொன்று விடுங்கள் உங்களுக்கு 5 லட்சம் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சதீஷ்குமார் நண்பர்கள் 5 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மது அருந்தலாம் என்று ஈச்சம்பட்டி வறட்டு ஏரி பகுதிக்கு சதீஷ்குமாரை அழைத்து சென்றனர். அங்கு மது அருந்திவிட்டு போதையில் இருந்த சதீஷ்குமாரை கை,கால்களை இரும்பு கம்பியால் கட்டி போட்டு 5 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டு உடலை ஏரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் தாயே தன் மகனை கொலை செய்ய மகனின் நண்பர்களை ஏவியது தெரியவந்தது.  இதையடுத்து அம்சவள்ளி (61), சதீஷ்குமாரின் நண்பர்கள் புல்லட் ராஜா, ஷேக் அப்துல்லா ,ராஜா, சுரேஷ், அரவிந்தசாமி ஆகிய 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த கொலை வழக்கில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநலூர் தொகுதி அதிமுக முன்னால்  எம்எல்ஏ பரமேஸ்வரி தம்பி புல்லட் ராஜா லாரி உரிமையாளரைக் கொலை செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HOLIDAY: ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
ஜனவரி 2ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! ஆட்சியர் குஷியான அறிவிப்பு
Embed widget